தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 29 - Chillzee Story
“சுந்தரி, உன் அம்மா வீட்டுக்கு போகணும்னு சொன்னீயே, ஒரு இரண்டு மாசம் போகட்டும் எல்லோருமா ஒன்னா போகலாம்.” – ஜெயஸ்ரீ
எனக்கு “வியாழக் கிழமைக்கு ஏற்கனவே டிக்கெட் புக் செய்தாச்சு மாமி” – சுந்தரி
“ஏற்கனவே புக் செய்தாச்சா? யார் செய்தது? நீயா?”
“நான் இல்லை---“ – இனியவன் என்று சொன்னால், திரும்ப அவனிடம் போய் கேட்டு வைப்பார்களே என்று தயங்கினாள் சுந்தரி.
“அப்புறம் யாரு? இனியாவா புக் செய்துக் கொடுத்தான்? அவனுக்கு லீவ் கிடைச்சிருச்சா? என் கிட்ட அவன் எதுவுமே சொல்லலையே?” – ஜெயஸ்ரீ
“நான் மட்டும் போறேன் மாமி”
“நீ தனியா போறீயா?”
ஜெயஸ்ரீக்கு பிடிக்கவில்லை எ
...
This story is now available on Chillzee KiMo.
...
கிச்சனில் மும்முரமாக வேலையில் ஈடுப்பட்டிருந்தாள்.
குரலை மெல்லியதாக்கி இனியவனிடம் பேசினாள் ஜெயஸ்ரீ.
“இனியா, நான் எந்த அர்த்தத்துல சொன்னேன்னு உனக்கு நல்லா தெரியும். தெரியாத மாதிரி