வெவ்வேறல்ல; பிரித்துக் காட்டி நம்மை மாயவலையில் சிக்கவைக்க துடிக்குது, மனசு!
ஒரு வினாடி அசந்தால் போதும், மனசு நம்மை கவிழ்த்துவிடும்! மனசின் ஏவலாளிதான் கடந்தகால நினைவுகள், எதிர்கால கனவுகள்!
நான் உங்களை விட்டு விலகிப் போய்விட்டால்....? என்ற நினைவு வந்தவுடன், பயம் உங்களை விழுங்கிவிட்டதே, கவனித்தீர்களா?
எப்போதும், நிகழ்காலத்தில் இருங்கள்! கண் எதிரே காண்கிற பொருளை பார்த்துக்கொண்டிருக்கிறபோதே, மனம் உங்களை கடந்தகால நினைவுகளிலே அழுத்திவிடும், அதன் தன்மையே அதுதான்! மனசினால், அல்லது அதனுடைய உடன்பிறந்தவன் ஈகோவினாலே, தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாது!
மீண்டும் மீண்டும் உங்களை தாக்கும். நம்மை காத்துக்கொள்ள கிடைத்த கவசம் நிகழ்காலத்தில் காலூன்றி நிற்பது! அதுதான் நாம்! அந்த மகாசக்தியின் பெயரே, 'இருப்பது' 'விழிப்பு'!
எங்கே, மறுபடியும் சந்தோஷமாக ஆடிப் பாடி மகிழுங்கள், பார்ப்போம்!"
தொடரும்...