வருடம் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு என்பதால் எப்போதும் ஏதாவது எழுதி கொண்டோ படித்து கொண்டோ இருப்பாள். படிப்பில் சுட்டி. அமைதியான பெண். அவளின் அருகே சென்ற தமிழ், "இந்தா காவ்யா நீ கேட்ட பென். வேற ஏதாவது வேணுமா?" என்றவளிடம் "தேங்க்ஸ்க்கா. வேற ஒன்னும் வேண்டாம்" என்றவள் மீண்டும் புத்தகத்தில் மூழ்க, அவள் வந்ததை கூட கவனிக்காமல் ஒருபக்கம் அமர்ந்து போனை நோண்டி கொண்டிருந்தாள் இலக்கியா.
அவளின் அருகே சென்ற தமிழ், "இலக்கியா" என அழைக்கவும் "ஹ்ம்ம் என்ன" என்ற குரல் வந்தாலும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
"நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத. இப்போ எல்லாம் அதிகமா போன் யூஸ் பண்ற. கொஞ்சம் குறைச்சுக்கோ. ஏதாவது இன்டெர்வியூக்கு பிரிப்பர் பண்ணலாமே. இது கடைசி வருஷம் தான? கேம்பஸ் இண்டெர்வியூஸ் இருக்குமே" சொன்னவளை முறைத்தாள் இலக்கியா.
"எனக்கு எதை எப்போ பண்ணனும்னு தெரியும். நீ உன் வேலையை பாரு. எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்ட. நீ என்ன பெரிய கலெக்டர் வேலையா பாக்கற?" இலக்கியா கத்தவும் "வாய மூடு இலக்கியா" என்ற கலைவாணியின் குரலில் அமைதியானாலும் இலக்கியாவின் கண்கள் தமிழை வெறித்து பார்த்து கொண்டிருந்தது.
"யாருகிட்ட எப்படி பேசணும்னு தெரியாது? எப்போ பாரு அவளை எடுத்தெரிஞ்சே பேசற...உங்களுக்காக தான் அவ இவ்ளோ கஷ்டப்படறா. நீ இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஏதாவது வேலைக்கு போனா அவளுடைய பாரம் கொஞ்சம் குறையும். அந்த அக்கறை உனக்கு இருக்கா?" கலைவாணியின் ஏச்சுக்கள் அவளை கோவப்படுத்தியது. அதற்கும் காரணம் தமிழ் என குற்றம்சாட்டியது மனம்.
"நான் எதுக்கு அவளுடைய பாரத்தை குறைக்கணும்? அண்ணா இருந்திருந்தா இதெல்லாம் கேக்க வேண்டிய அவசியமே இல்லை...எல்லாத்துக்கும் இவதான் காரணம்" இலக்கிய பேசி முடிக்கும் முன் "இலக்கிய.. வாய மூடு.உள்ள போ" என கலைவாணி கத்த எரிச்சலில் முனகி கொண்டே உள்ளே சென்றாள் இலக்கியா.
"இந்தா தமிழ். டீயை குடி. அவ இப்படி தான் உனக்கே தெரியும்ல. விடு" கலைவாணி சொல்லி கொண்டே தமிழின் கையில் டீ கப்பை வைக்க "அம்மா, அவ பேசுவதை நான் பெருசா எடுத்துக்கவே இல்லை. நீங்க தான் டென்சன் ஆகறீங்க. விடுங்கம்மா. சின்னப்பொண்ணு தான. இந்தாங்கம்மா. அவளுடைய செமஸ்டர் பீஸ். காலைல காலேஜ் போகும்போது கொடுத்துருங்க. அப்பறம் அம்மா, அதே ஏரியால எனக்கு இன்னொரு வீட்ல