(Reading time: 8 - 16 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

இன்னொண்ணு நீதான் அடிக்கணும்...”, பேரம் பேசியபடியே மாது செல்ல, அவனை இன்னொரு குடமும் அடிக்க வைக்க  தாஜா செய்தபடியே பின் சென்றாள் மைத்து....

“ரகுண்ணா.... இன்னைக்கு சாயங்காலம் மேட்ச் இருக்கா....”, தன் பெரிய மாமன் மகனிடம் கேட்டான் மாது....

“இல்லைடா இன்னிக்கு விளையாடப் போகலை... காலேஜ்ல கொஞ்சம் வேலை இருக்கு... லேட்டாதான் வருவேன்...”

“ரகுண்ணா.... என்னை எப்போ நீங்க விளையாடற கிரிக்கெட் பாக்க கூட்டிண்டு போகப்போற....”

“நீ அங்கல்லாம் வர்றது சரியா வராது மைத்துக்குட்டி... எல்லாம் பெரிய பெரிய பசங்க... அப்பறம் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடுவா....”

“ரகுண்ணா எனக்கு கிரிக்கெட் எத்தனை தூரம் பிடிக்கும்ன்னு நோக்குத் தெரியும் இல்லை... அவா கிண்டல் பண்ணினா பரவாயில்லை... நான் வரேன்....”

“இல்லடா குட்டி, அது சரிப்பட்டு வராது... ஒண்ணு வேணா பண்ணு... இன்னைக்கு பத்ரி அவன் ஸ்கூல் friends கூட விளையாடப்போறான்... அவனை கூட்டிண்டு போக சொல்றேன்... அவன் கூடப்போ... ஆனா அங்க போய் சமத்தா இருக்கணும்... சரியா....”

“கண்டிப்பாண்ணா எந்த சேட்டையும் பண்ண மாட்டேன்.... நான் பாட்டுக்கு ஒரு ஓரமா உக்கார்ந்து அவா விளையாடறத பார்த்துட்டு வந்துடறேன்....”, மைத்ரேயி வாக்களிக்க ரகுவும் தன் தம்பியிடம் அவளை அழைத்து செல்ல கூற சென்றான்....

இவ்வாறாக நம் நாயகியின் கிரிக்கெட் கனவிற்கு  அவளின் மாமன் மகனால் பிள்ளையார் சுழி போடப்பட்டது.....  

தொடரும்

Next episode will be published on 10th June. This series is updated weekly on Wednesday mornings.

Go to Kanavu Meippadum story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.