(Reading time: 9 - 17 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

" அன்னிக்கி தீர்ந்துபோச்சு, சரி, அப்புறம், போனிலே சார்ஜே பண்ணலையா?"

" சாரி, வத்சலா! மறந்துபோயிடுத்து! இப்பத்தான் திடீர்னு ஞாபகம் வந்தது, அதான்.........."

" சரி, கடந்தவை கடந்தவைகளாகவே இருக்கட்டும். உன்கிட்ட ஒரு ரொம்ப ரொம்ப முக்கியமான ரகசியத்தை ஷேர் பண்ணிக்கலாம்னுதான் போன் பண்ணினேன்......."

ஷகீலாவும் நிர்மலாவும் காதை தீட்டிக்கொண்டனர்.

" கேட்கிறியா?"

" சொல்லு, வத்சலா!"

" நம்ம கூடப்பிறந்த மூத்தவங்க ரெண்டுபேரும் நமக்கு தெரியாம ஏதோ ரகசிய திட்டம் வைத்திருக்காங்க போலிருக்கு........."

" அப்படியா? சொல்லு! சொல்லு!"

" அன்னிக்கி நாம நாலுபேரும் அக்கா வீட்டிலே சந்திச்சு பேசினதுக்குப் பிறகு, உன்னிடம் ஏதாவது பேசினாங்களா?"

" இல்லையே......"

" அப்ப, கவனமா கேள்! அவங்க ரெண்டு பேரும் பணம் கொடுத்து ஒரு பிரைவேட் டிடெக்டிவை பிடிச்சு, அவன்மூலமா, நம்ம வீட்டு ரௌடியைப்பற்றி விசாரிக்க சொல்லியிருக்காங்களாம்.."

" அப்படியா? ஏதாவது தெரிஞ்சிதாமா?"

" அது எனக்கு தெரியலே, நீ ஒண்ணு பண்ணு! நான் சொன்ன விஷயத்தை தெரிந்தாமாதிரி, காட்டிக்காமல், அவங்களை நேரிலே பார்த்து, விவரம் தெரிஞ்சபிறகு எனக்கு தெரிவி! யாரோ வராங்க, அப்புறம் பேசறேன்......"

விமலா மூத்தோர் இருவரையும் பார்த்து, முறைத்தாள்.

" வத்சு சொன்னது, உண்மையா?"

" அதை சொல்லத்தான் உன்னை கூப்பிட்டோம், வத்சலாவுக்கும் தெரிவிக்கத்தான், அவளை அழைத்துவரலையான்னு கேட்டோம், எதையும் உங்ககிட்ட மறைக்கணும் என்கிற தப்பான எண்ணமே கிடையாது, எங்க ரெண்டு பேராலே, முடிஞ்சதை செய்திருக்கோம், நாலுபேர் நன்மைக்காகவும்தான்!"

" நம்பறேன், சொல்லுக்கா!"

" நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும், கவலையில்லை. எங்க கடமையை செய்கிறோம்.

நிர்மலா! விவரமா சொல்லு!"

"கொஞ்சம் நிறுத்துங்க! வத்சலாவுக்கும் கான்ஃபெரன்ஸ் கால் மூலம் ஒரே நேரத்திலே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.