தெரிவிச்சிடுவோம்......"
" அதுவும் சரிதான், போடு!"
" வத்சலா! நீயும் கேட்டுக்கோ! உங்கிட்ட விஷயத்தை மறைச்சு எங்களுக்கு என்ன லாபம்?
கமிஷனர் இப்ப, கொரோனா லாக்டவுனிலே, ரொம்ப பிசியா இருப்பாரு, நம்ம மேட்டர் அவருக்கு ஜுஜுபி! அதனாலே, அவரை தொந்தரவு பண்ணவேண்டாம்!னு, ஒரு பிரைவேட் டிடெக்டிவை ஏற்பாடு பண்ணியிருக்கோம்! இருபதாயிரம் ரூபாய் நானும் அக்காவுமா தந்துட்டோம். எத்தனை சீக்கிரம் முடியுமோ, அத்தனை சீக்கிரத்திலே, அந்த ரௌடி இருக்கிற இடத்தை கண்டுபிடித்து சொன்னார்னா, மேற்கொண்டு என்ன செய்யலாம்னு நாம் நாலுபேரும் மீட் பண்ணி, முடிவு எடுப்போம், சரியா?"
" வெரி குட், அக்கா! டிடெக்டிவ் பெயர் என்ன?"
" டிஜிடல் டிடெக்டிவ்ஸ்னு பெயர்! நல்ல அனுபவஸ்தர்! நிறைய கேஸ்லே, கண்டுபிடிச்சிருக்காராம்! இன்னும் ஒரு வாரத்திலே சொல்றேன்னு சொல்லியிருக்கார்......"
" அக்கா! அவர் என்ன சொல்லிடப் போறாரு, பெரிசா? ஏதோ ஒரு இடத்திலே இந்த பொம்பளையோட இருக்கான் அந்த ரௌடின்னுதானே! அதை தெரிஞ்சு நாம என்ன செய்யப் போகிறோம்?
அதுக்குப் பதிலா, அந்த ரௌடியை கண்டுபிடிச்சபிறகு, என்ன செய்யப் போகிறோம்னு தீர்மானிக்கிறதுதானே, முக்கியம்!"
" வத்சலா! நீ சொல்வது கரெக்ட்! உனக்கு ரஞ்சித் மாதிரி போலீஸ் மூளை! சரி, நீயே சொல்லு! என்ன செய்யலாம்?"
" வேறென்ன செய்ய? அந்த ரௌடி உயிரோடிருக்கிற வரையிலே, நம்ம உயிருக்கு ஆபத்துதானே! ஆளை வைச்சு, தீர்த்துக் கட்டிட வேண்டியதுதான்! விமலா! சரிதானே?"
" வத்சலா! உனக்கு போலீஸ் மூளைன்னு அக்கா சொன்னது கரெக்ட்! எடுத்த எடுப்பிலேயே, கூடப் பிறந்தவனை, ஒரே ரத்தத்தை, ஒரு தாய் - தகப்பனுக்கு பிறந்தவங்களே, கொல்வது, அந்த ரௌடி பல வருஷம் முன்பு இன்னொரு ரௌடியை கொன்றதைவிட ஈனத்தனமானதா உன் புத்திக்கு படலே?"
" நீங்க மூணுபேரும் அப்படி நினைச்சா, இந்த கூட்டணியிலிருந்து உடனடியா நான் விலகிக்கிறேன்.........."
" வத்சலா! ஒரு சந்தேகம்! தயவுசெய்து அதை தீர்த்து வைக்கிறியா?"
" அக்கா! நீங்க மூணு பேருமே மூத்தவங்க! நான் சின்னவ! என்னிடம் போய்..."
" வயசும் அறிவும் ஒண்ணாகாதும்மா! உனக்கும் ரஞ்சித்துக்கும் உள்ள புத்திசாலித்தனம்,