நிச்சயமா எங்களுக்கு கிடையாதுங்கறதை சற்று முன்பு, நீதானே நிரூபிச்சே, அதேபோல, இந்த சந்தேகத்தையும் தீர்த்துவைம்மா!"
" முயற்சி பண்றேன், கேளுங்க!"
" துப்பாக்கி, கத்தி, ஈட்டியாலே கண்ணுக்கு தெரிகிற எதிரியை சுலபமா கொல்கிற இந்த சமுதாயத்துக்கு சவாலாகத்தான், கடவுள் இப்ப கொரோனாவை அனுப்பியிருக்கான், கண்ணுக்கே தெரியாத கிருமி பெரிய மனித உடல்களை உயிரைக் குடித்து சாகடிக்குதே அதுவும் ஒரே நேரத்திலே உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கிலே சுமார் இருநூறு நாடுகளிலே! ஏன்? அகம்பாவம் பிடித்த மனிதனை எச்சரிக்கத்தான், கடவுள் அனுப்பியிருக்கார்!
ரௌடியை தீர்த்துக் கட்டச் சொல்கிற உன் வீட்டிலே கொரோனா எந்த நேரமும் புகுந்து யாருக்காவது ஒருத்தருக்கு வந்தால்கூட, உன் வீட்டிலே எல்லாரும் அடைபட்டுக் கிடப்பீங்க, வியாதி வந்தவரை தனியா வார்டிலே மடக்கிப் போடுவாங்க!
உங்களாலே என்ன செய்யமுடியும், யோசித்து பார்த்தியா?
அதனாலே, அவசரப்படாம, ஈகோவுக்கு அடிமைப்படாம, அடக்கமா யோசி!
பதினெட்டு வருஷம் முன்பு நீ இருந்தாமாதிரியா, இப்பவும் இருக்கே? எங்க மூணுபேருக்கும் இன்னமும் நினைச்சா சிரிப்பு வருது,
நம்ம வீட்டு பின்புறத்துக்கு, இருட்டினபிறகு உன்னை போகச்சொன்னா, நீ பயந்து நடுங்குவே, எதுக்குப் பயந்து, தெரியுமா? கரப்பான் பூச்சிக்கு!
( மூவரும் சிரிப்பு)
அந்த வத்சலா, இன்னிக்கும் அப்படியே பயந்தாங்கொள்ளியாவா இருக்கா? நேர்மாறா, தைரியசாலி ஆயிடலையா?
அதேபோல, ரௌடியா சிறைக்குப் போய் பல வருஷ கடுங்காவலுக்குப் பிறகு, வெளியிலே வந்திருக்கிற நம்ம சகாதேவன் கூடப்பிறந்தவன், மாறியிருந்தால், நம்ம பயம் வீணானது இல்லையா?
அதனாலே, அவன் இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சு, என்ன செய்யலாம்னு கேட்டா, தீர்த்துக்கட்டலாம்னு சொல்லாதே, திருந்திட்டானான்னு தெரிஞ்சிப்போம்!
திரிந்திட்டா, அவனை நம்ம தம்பியா ஏத்துப்போம், நமக்கு இருக்குறது, ஒரே ஒரு சகோதரன்! அவனை நல்லபடியா வாழவைப்போம்.
நாளைக்கே, இல்லை, இன்னிக்கே எனக்கு கொரோனா பாதிப்பு வந்து மருந்து இல்லாம, நான் செத்துப்போனா, என் பணம் என் உயிரை காப்பாத்துமா?
யோசிக்க வைக்கத்தான், கொரோனா வந்திருக்கு! சரியா, தப்பா?"
வத்சலா, விமலா, நிர்மலா மூவருமே ஷகீலாவின் பேச்சைக் கேட்டு கண்ணீர் உகுத்தனர்!
தொடரும்...
Next episode will be published on 16th June. This series is updated weekly on Tuesday mornings.