இதுதாண்டி கோந்தே நம்ம நிலைமை.... இருக்கறதை வச்சுண்டு நடக்கணும்... பறக்கறதுக்கு ஆசைப்படக்கூடாது.... கிரிக்கெட் விளையாடறது எல்லாம் பெரிய பணக்காராளால மட்டும்தாண்டி முடியும்... நம்மளால முடிஞ்சது ஆத்தோட விளையாடி நம்ம ஆசையை தீர்த்துக்கறது மட்டும்தான்....”
“அதுக்கும்தான் தடை போட்டாச்சே... இனிமே தாத்தா நான் விளையாடவே போக்கூடாதுன்னு சொல்லிட்டா...”
“அதுக்கு வேணா நான் உனக்கு உங்க பாட்டியண்ட பெர்மிஷன் வாங்கித் தரேன்... நீ தோட்டத்துல போய் விளையாடு...”
“பாட்டி அப்படியே பீச்ல போய் விளையாடவும் பெர்மிஷன் வாங்கு... துளசிக்கிட்ட நான் இந்த வாரம் வரேன்... ரெண்டு பேரும் புது பந்து வச்சு விளையாடலாம்ன்னு சொன்னேன்....”
“நான் உனக்கு கொடுக்கற செல்லம்தான் நீ இப்படி ஆடிண்டு இருக்கேன்னு உன் பாட்டி என்னை திட்டபோறா... சரி நான் அவாளண்ட பேசறேன்... முகத்தை அலம்பிண்டு போய் விளக்கேத்தி ஸ்லோகம் சொல்லு போ...”
மைத்தி தன் பப்பு எந்த இடத்திலும் வேகாத சோகத்தில், கடவுளிடமாவது தன் குறையை முறையிடலாம் என்று விளக்கேற்ற சென்றாள்...
காமாட்சி பாட்டி, கற்பகம் பாட்டியிடம் பேசி மைத்தி தோட்டத்திற்கு சென்று விளையாடுவதற்கு மட்டும் பெர்மிஷன் வாங்கினார்.... அதுவும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளுடன்... முதல் நிபந்தனை அவள் அங்கு கிரிக்கெட் பார்க்கலாம்... ஆனால் விளையாடக்கூடாதென்று.... அதையும் பேசி ஒருவாறாக பத்து நிமிடம் வரை விளையாட அனுமதி வாங்கினார்.... வார நாட்களில் படிப்பும் அதிகமிருந்ததால் மைத்தியால் தினம் விளையாட போக முடியவில்லை.... சென்ற இரண்டு நாட்கள் விளையாடி பத்து நிமிட நேரம் அவளுக்கு போதவில்லை... ஏகப்பட்ட வருத்ததுடனே சுற்றிக்கொண்டிருந்தாள்....
அடுத்த டாஸ்க் மைத்தி, காமாட்சி பாட்டிக்கு கொடுத்தது, அந்த வார இறுதியில் அவளை கடற்கரைக்கு விளையாட அனுப்ப கற்பகம் பாட்டியிடம் பெர்மிஷன் வாங்குவது.... மிக கஷ்டமான டாஸ்க்.... காமாட்சி பாட்டி வெற்றி பெறுவாரா பார்க்கலாம்....
தொடரும்
Next episode will be published on 15th July. This series is updated weekly on Wednesday mornings.