(Reading time: 11 - 22 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை  மறந்தறியேன்! - 07 - சாகம்பரி குமார்

த்யன் ரேச்சலின் மீது கோபப்பட நிறைய  காரணங்களை   பட்டியலிலிடலாம். ஆனால் அவன் அமைதியாக ஒதுங்கிப் போக ஒரே ஒரு காரணம்தான் இருந்தது. அவன் வம்பை விலைக்கு வாங்கும் ரகம் இல்லைஅதாவது இப்போது இல்லை!.

பொதுவாக அவனிடம் ஒரு துடிப்பு இருக்கும். அவனுக்கு எதிராக யார் என்ன செய்தாலும்அல்லது அவனுக்கு பிடிக்காததை யார் செய்தாலும் ஒரு வழி செய்யாமல் விட மாட்டான். அவனுடைய தொழில்முறை எதிரிகளுக்கும் நிறைய பாடங்களை கற்று தந்திருக்கிறான்..

ஆனால் மீராவை மணந்த பிறகு… இது போன்ற கடுமையான திருப்புதல்கள் அவளுக்கு பிடிக்காது என்று தெரிந்த பின்பு பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே எனறு மாறி விட்டான்

அதனால்தான் ரேச்சலுக்கும் நிபந்தனை இல்லாத பொது மன்னிப்பு வழங்க விட்டான். இதில் இன்னுமொரு நல்ல விஷயம் என்னவெனில் ரேச்சலை பழி வாங்குவதற்காவது அவளை பார்த்து தொலைக்கும் அவலம் அவனுக்கு ஏற்படவில்லை

அதேதான் ரேச்சலுக்கும் தோன்றியது.சத்யனை தவிர்ப்பது நல்லது என்று தோன்றியதால்.. அவன் வீட்டில் இல்லாத போது சென்று மனுகுட்டியை கொஞ்சி வருவாள். மற்றபடி அவளுக்கு பொழுதுபோக நிறைய வேலைகள் இருந்தன. மம்மிக்கு உதவுவதுஜெமி தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதுஎடியுடன் விளையாடுவதுவார இறுதியில் க்ராஃப்ட் கிளாஸ் எடுப்பது என்று மும்முரமாக இருந்தாள்.

வெல்… அப்படியே இருந்தால் கதை நகர வேண்டாமாசத்யனுக்கு கோபம் வரும் ஒரு செயலை அவளை அறியாமலேயே செய்து விட்டாள்மீண்டும் ரேச்சல் சத்யனை வதம் செய்வது பற்றி ஆலோசிக்க ஆரம்பித்தாள்.

அது அந்த வருட  மழைக் காலத்தின் ஆரம்ப நாளாக இருந்தது. அந்தப் பருவத்தின் முதல் மழையை அன்று பெய்யலாமா என்று வானம் யோசித்துக் கொண்டிருந்த நேரம். மெதுவாக இருள் சூழ ஆரம்பித்தது. மேகங்கள் குவிய ஆரம்பித்தன.

 அந்த சமயத்தில் நந்தினி அம்மாவையும் மனுவையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று இருந்தாள். அன்றைக்கு தொழிற்சாலைக்கு செல்ல வேண்டிய முறை அப்பாவுடையது.. அவரும் தொழிற்சாலைக்கு சென்று விட்டார். எனவே சத்யன்... ரஞ்சன்... தாத்தா மட்டும் இருந்தனர். ரஞ்சன் அவனுடைய அறையில் இருந்தான்.

அடர்ந்த மேகங்கள் குவிய ஆரம்பித்ததால் அந்த மலைப்பகுதி குளிர் எடுக்க ஆரம்பித்தது.  மெல்ல உடல் நடுங்க ஆரம்பித்த  தாத்தாவை அழைத்து சென்று அவருடைய அறையில் படுக்க வைத்தான்.

" நீங்கள் இங்கே படுங்கள் தாத்தா. மழை பெய்யும் போல் இருக்கிறது.   ரொம்பவும் குளிராக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.