(Reading time: 11 - 22 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

ஓவியம் வரைந்து கொண்டிருந்தாள்.

திடீரென்று இயற்கை தன்னை உருமாற்றி கொண்டு மழை மேகங்களை அழைத்து இருள் போர்வையை போர்த்தி கொள்ள ஆரம்பித்தது. ஓவியம் வரைவதை நிறுத்திய மீரா  சிட்-அவுட்டின் பாராபெட் சுவற்றின் கைபிடியில் சாய்ந்தூ நின்று அதனை ரசிக்க ஆரம்பித்தாள்.

"அடடாஓவியப் பெண்ணேஉன்னுடைய வேலையை மழை கெடுத்து விட்டதா?"

"இல்லைஅழகிய கதைகளை நினைவுபடுத்தி எனக்குள்  இன்னும் இனிமையான கற்பனை காட்சிகளை உருவாக்கி கொண்டிருக்கிறது. வேறு ஒரு ஓவியம் வரையும் சிந்தனை எனக்கு வந்து விட்டது."

"என்ன மாடல் அது"

"ம்அது மழையில் நனைந்து கொண்டிருக்கும் உணர்வினை பற்றியது…"

"புரியவில்லை"

"ஓகேஇப்படி விளக்க முயற்சிக்கிறேன்திடீரென்று பெய்யும் மழை ஒவ்வொரு மனித மனதிலும் பலவிதமான எண்ணங்களை கொண்டு வரும்அது அவர்களின் முகத்தில் பலவித பாவங்களை வெளிப்படுத்தும். ரொம்பவும் நேச்சுரலாக இருக்கும்மழையின் நனையும் குழந்தை முகம் கண் சுருக்கி உதடு குவித்து குதூகலத்தை வெளிப்படுத்தும்."

"கரெக்ட்சிலருக்கு மகிழ்ச்சியையும்.. உற்சாகத்தையும் தரும்.. அதே மழை சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு கவலையை தரும்பாரம் சுமக்கும் உழைப்பாளிகளுக்கு வேலையை தற்காலிகமாக நிறுத்தி ஓய்வு தரும்என்னை போன்றவர்களுக்கு  நிம்மதி தரும்…"

"என்னது…?"

"தொழில்மாமழையில் நனையும்போது கான்கிரீட் இறுகி நன்றாக வலுவாகும்தண்ணீர் செலவு மிச்சம்…."

"ஹய்யோநான் சொல்ல வந்ததையே மாற்றி விட்டீர்கள்… "

"சரிசரிசொவ்லும்மா?"

"ஹாங்அதுஅந்த மழை காதலர்களுக்கு மகிழ்ச்சியை தரும்ஒரு குடையின் கீழ் இருவரும் இருக்கும்போது உலகமே அந்த குடைக்குள் இருப்பது போல உவகை வரும்…" என்றவள் மெல்லிய குரலில் பாடினாள்

யோசித்து கொண்டு இருந்த சத்யனுக்கு அந்த பாடல் மறந்து விட்டது… சேஎன்ன இப்படி ஒரு மறதிமீராவின் நினைவில் மறதி வரலாமா…? தலையை குடைந்து அந்த பாடலை ரீ கால் செய்ய முயற்சித்தான். அப்போது

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.