(Reading time: 11 - 22 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

மகள் கூட உன்னிடம் வகைதொகை இல்லாமல் பேசி இருக்கிறாள். நீ அமைதியாக இருந்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவாய். இன்று உனக்கு என்ன வந்தது?" என்று கேட்டான்.

"அவள் என்னை இரிடேட் செய்து கொண்டே இருக்கிறாள்"

"அவள் ஒன்றும் செய்யவில்லை. நீதான் எரிச்சலடைகிறாய். எனக்கு இது நல்லதாக படவில்லை. இப்படி ஆரம்பிக்கும் பல சண்டைகள் வேறுவிதமாக முடிந்திருக்கின்றன. காதல்மோதல் என்று கதை மாறி விடும். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா"

"சீ…  நீ என்ன சொல்கிறாய்?. என்னுடைய மீராவிற்கும் இவளுக்கும் ஒரு துளிகூட ஒற்றுமை  கிடையாது. அவள் அமைதி புறா…  இவள் பெரிய வாயாடி... ரவுடி... இவள்  பக்கம் திரும்புவதே பெரிய தவறு. நீ வேற இவள் பக்கம் நான் மயங்கி சாய போகிறேன் என்று மிரட்டுகிறாய். "

"உனக்குள்ள அப்படி ஒரு எண்ணம் இருந்தால் மிக மிக நல்லது. அப்படியே இரு. என்றாவது மீரா உன்னிடம் திரும்பி வரும் பொழுது இந்தப் பெண்ணுடன் இருக்கும் பிரச்சினை பெரிய சிக்கல் ஆகிவிடக்கூடாது. நீ உன்னுடைய வழியில் அமைதியாக செல்ல பார். என்றாவது ஒருநாள் மீரா உன்னைத் தேடிக் கொண்டு வருவாள். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்... கவனமாக இரு" என்று ரஞ்சன் அவனை எச்சரித்தான்.

"ஓகேநீ சொல்வதை நான் புரிந்து கொண்டேன்.. இனி அமைதியாக இருக்கிறேன்ஒருவனை வளைத்து பிடிக்க இருக்கும் ஆயிரம் வழிகளில் சண்டையிட்டு சீண்டுவதும் ஒன்றுஐ ம் நாட் தட் ஸ்டுப்பிட்!. கெட் லாஸ்ட் ரேச்சல்…!

ஆனால் ரேச்சல் அமைதி இழந்து விட்டாள். அவனை இனி சும்மா விடக் கூடாது. அவனை பற்றிய அத்தனை விவரங்களையும் சேகரிக்க வேண்டும்இருடாஉன்னுடைய ஊருக்கே சென்று கண்டுபிடிக்கிறேன். அப்புறம் உனக்கு இருக்கு வான வேடிக்கைஇந்த ரேச்சலிடம் ஏன் வம்பு வைத்தோம் என்று பதறுவாய்."

அவள் சூளுரைத்தாள்.

தொடரும்

Next episode will be published on 14th July. This series is updated weekly on Tuesday evenings.

Go to Marappin Maraven Ninnai Maranthariyen story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.