(Reading time: 11 - 21 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

"வெளியே போக பிளான் போட்டிருக்கேன்!" என்றான் சற்றே ராகமாக!

"போயிட்டு வாங்க!"அவன் கூற வருவதனை புரியாமல் அவளும், தான் கூற விரும்புவதனைப் புரிந்துக் கொள்ள மாட்டாளா என்று அவனும் விழித்த அத்தருணம் சற்றே சங்கடமான ஒன்றே! இவள் உண்மையில் மக்குத் தான் என்பவனாய்,

"ஹனிமூன் பற்றி பேசிட்டு இருக்கேன்!" என்றான் சற்றே வெறுப்பாக!

"ஆங்...! இப்போ அதுக்கு என்ன அவசியம்?" தெரிந்தோ, தெரியாமலோ அப்பதிலினை நல்கினாள் சிவன்யா. அவள் கேள்விக்கு எவ்வகை விடையளிப்பது என்றே புரியாமல்  மூச்சினை இழுத்துப் பிடித்தவனாய், தன் கரத்தினைக் கொண்டு நெற்றியினில் அடித்துக் கொண்டான் அசோக்!

"ஒண்ணுமில்லை...நீ போய் அந்த மீதி இருக்குற கணக்குப் பேப்பரை திருத்துப்போ!" அவள் உண்மையில் புரியாமல் தான் பேசி இருக்கிறாள் என்பது அவன் கூறிய மாத்திரமே தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தவளைக் காணும்போதே புரிந்தது அவனுக்கு! அவளிடத்தில் அவன் ஈர்க்கப்பட்டதன் முக்கிய காரணமே, அவளது அந்த அப்பாவித்தனமே! எங்குத் தான் இருந்தாளோ, இத்தனை ஆண்டுகளாய்! எதிர்நோக்கவே இயலவில்லை, நிகழ்ந்த அந்த ஒற்றை சந்திப்பு இவ்வளவுத் தூரம் கொணரும் என! வாழ்வில் நாம் எதேர்ச்சையாக சந்தித்த ஒருவர், வாழ்வின் சரிபாகமாய் வருவார் என்ற காலத்தின் கட்டளை உண்மையில் விசித்ரமானதே! கானல் நீரினை மட்டும் கண்ட வாழ்வினில், இன்று ஜீவநதி பெருக்கெடுத்து ஓடுகிறது! அவள் மட்டும் வராமல் இருந்திருந்தால், இருள் சூழ்ந்த அவன் உலகில் ஆதவ உதயம் என்றுமே நிகழ்ந்திருக்காது! அவள் மூலமாகவே அவன் அடையாளம் அவனுக்குத் தெரிந்தது, அவன் தாயின் தவ வாழ்வு அவனுக்கு புரிந்தது, அவளாலே, இன்று அவனுக்கென ஓர் இல்லறம் நல்லறமாய் தோன்றியிருக்கிறது! அவள் உலகிற்கு சாதாரண கன்னிகையே! அவனைப் பொறுத்த மட்டில், அவள் அவனது தேவி! வளமைகளை வாரி வழங்கும்  ஒரு தேவதை அவள்! என்றேனும் ஓர் நாள் இது போலவே, நம் அனைவரது வாழ்விலும், காலம் ஓர் சந்திப்பினை நிகழ்த்தும், அதுவரையிலும் எவ்வளவு காயங்கள் கொண்டிருந்தாலும், மனம், அக்காயங்களின் மருந்தினை சட்டென கண்டறிந்துவிடும். மனதிற்கு அந்தச் சக்தி உண்டு! சந்திந்த அந்நபர் நம் வாழ்வின் அனைத்தும் வேதனைகளில் இருந்தும் முக்தியினை நல்குவார்! நிரந்தரமான முக்தியினை! தங்களின் துணைக்கான மரியாதையை செலுத்துவதில் தயக்கம் காட்டாதீர்கள்! அம்மரியாதையை விட, தங்கள் காதலினை வேறு எவற்றாலும் எடுத்துரைக்க இயலாது. மனம்விட்டு பேசுவதாலும், மடி சாய்வதாலும், கண்ணீர் வடிப்பதாலும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.