துடைப்பதாலும் இங்கு உலகம் அழிந்துவிடப் போவதில்லை! அனைத்தையும் கடந்து, "நானிருக்கிறேன், சரி செய்து விடலாம்!" என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கியிருக்கின்றன இறைவனாலும் அளிக்க இயலா வரங்கள் எல்லாம்!
ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தவன், சிவன்யாவின் உரத்த குரலினால் சுயநினைவினை அடைந்தான்.
"என்னங்க போன்!" என்றப்படி பரபரப்பாக ஓடிவந்து அவனது கைப்பேசியினை அவனிடத்தில் திணித்தாள் சிவன்யா. அதில் தெரிந்த அடையாளத்தினைக் கண்டதுமே சட்டென ஒரு வித பதற்றத்தோடு அதை உயிர்ப்பித்து செவியினில் வைத்தான் அசோக்!
"ஹலோ சார்! சொல்லுங்க!"
"............."
"தேங்க்யூ சார்!"
"............."
"இல்லை சார்! வீடு இருக்கு அங்கே! நான் பார்த்துக்கிறேன் சார்!"
"............."
"தேங்க்யூ சார்!" என்று அவன் தொடர்பினைத் துண்டிக்கும் போது, ஆண்களுக்கே உரிய நாணம் அவன் முகத்தில்!
"யாருங்க?" ஆர்வம் தாங்காமல் கேட்டாள் சிவன்யா.
"லீவ் கொஞ்சம் எக்ஸ்டண்ட் பண்ண சொல்லி கேட்டிருந்தேன், அதுக்கான கால் தான்!" என்றுவிட்டு அடுத்த கேள்விக்காக காத்திருந்தான் அசோக்.
"எதுக்கு?" என்பதுத் தான் அடுத்த கேள்வி! அவனோ பதில் உரைக்காமல் சுற்றும் முற்றும் நோக்கினான்.
"எதுங்குங்க?" என்று அவன் தோளினை அவள் உலுக்க,
"அதான் சொன்னேனே ஹனிமூனுக்குன்னு!" என்று குறும்போடு புன்னகைத்தான் அசோக்.
"எதுக்கு அதெல்லாம்?" ஏனோ சிறிது சங்கடம் அவன் குரலில் எதிரொலிக்காமல் இல்லை. காதலில் ஒன்றிணைந்தாலும், முழுமையான உரிமைகள் அங்கீகரிக்கப்படா நிலையில் அச்சங்கடம் நியாயமானதே! அதை உணர்ந்தவனாய் வாய்விட்டு சிரித்தான் அசோக்.
"ஹனிமுன் அம்மாவுடைய ஊருக்குப் போகலாம் இருக்கேன்!" என்றதும் அச்சங்கடம் காணாமலே போனது.
"நான் இதுவரைக்கும் அந்த ஊரை பார்த்ததில்லை சிவா! என்னமோ அம்மா பிறந்த இடத்தை பார்க்கணும்னு தோணுது! உனக்கு விருப்பம் இல்லைன்னா..." அவன் முடிப்பதற்குள்,