வேளை, மெத்தையின் ஓரத்திலிருந்து உருண்டு வந்தவள், அவனை இறுக அணைத்தவளாய், அவனது நெஞ்சத்தில் சிரம் பதித்தாள். சட்டென நிகழ்ந்த அச்செய்கை அவனைத் திடுக்கிடவே வைத்தது. அவளோ அவனை மதிப்பதாகவும் இல்லை. ஒரே நொடியில் அவனது உறக்கமெல்லாம் கலைந்துப் போக, கேள்வியோடு சிவன்யாவை நோக்கினான் அசோக். அவளோ, தான் வசிக்கும் வாசஸ்தலத்தில் செவி வைத்தவளாய் தனக்கென உரிய அவனது இதயத்துடிப்பின் ஓசையில் மெய்மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அக்கணம் ஓர் ஆண்மகனே ஆகிடினும், அவன் முகமும் சற்றே நாணத்தால் மலரவே செய்தது. தனது ஒரு கரத்தால் அவளை தன்னோடு பிணைத்தவன், நிம்மதி மூச்சுடன் தன் விழிகளை மூடிக்கொள்ள,காலமானது அந்த இரு இதயங்களுக்கும் நிம்மதியான ஓய்வினை நல்கியது. இரவு நேர சந்திரனின் ஔிக்கீற்றுகள், தன் பங்கிற்கு எழுதுகோலாய் உருமாறி, உடுக்களின் உதவியோடு, காலத்தின் காகித்தில் அந்த இரு நெஞ்சங்களின் காதலினை ஒய்யாரமாய் வரையத் தொடங்கின.
தொடரும்!
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Uyiril kalantha urave story main page
{kunena_discuss:1149}