Page 4 of 22
”ஓ அதுவா அவள் எங்கயோ இருந்தாளே எங்க எங்க” என அவர் சமாளிக்க சந்துருவிற்கு பின்னால் நின்றபடி துர்காவோ தன்னை காட்டிக் கொடுக்க வேண்டாம் என்பது போல் சைகை ஆட்டிவிட்டு சட்டென அங்கிருந்த கதவின் பின்னால் ஒளிந்துக் கொண்டார். அதைக் கண்ட தேவராஜனோ நொந்துப் போனார்
”இந்த வயசுல இவள் ஒருத்தி கண்ணாமூச்சி விளையாடறாளே இவளை” என ... தலையில் அடித்துக் கொண்டதோடு விடாமல் மகனின் தோளிலும் ஒரு அடி போட்டார் ”அப்பா அப்பா ஏன் அடிக்கற” என கத்தியவனை இழுத்துக் கொண்டு அவனது அறையில் சேர்த்தார்
This story is now available on Chillzee KiMo.
...