அனுப்பினார்...
நீண்ட நாட்கள் கழித்து மைத்தியை பார்த்த துளசிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.... இருவரும் இத்தனை நாள் விட்டுப்போன கதைகளை பேச ஆரம்பித்தனர்....
துளசியின் தந்தை கண்ணன் அந்த அகாடமியின் கோச்சுடன் வர ரகு அவருடன் பேச சென்றான்...
அவர் முதலில் இவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்த்துவிட்டு சொல்வதாக சொல்ல... இவர்களின் ஆட்டமும் ஆரம்பித்தது...
பத்ரியின் நன்பர்களுடனே துளசியும், மைத்தியும் விளையாட ஆரம்பித்தார்கள்... துளசியின் மட்டையடிக்கும் திறனும், மைத்தியின் பந்து வீசும் திறனும் அபாரமாக இருந்தது ... பல நேரங்களில் பயிற்றுவிப்பாளரே அவர்களை கைத் தட்டி பாராட்டினார்...
இருவரும் மிக நன்றாக விளையாடுவதாகக் கூறி அடுத்த வாரம் தான் பயிற்றுவிக்கும் அகாடமியில் வந்து சேருமாறு கூறி சென்றார்...
“தம்பி இவர் அறிமுகம் கிடைக்கறதே கஷ்டம்... என்னோட வேலை செய்யுறவர் இவருக்கு சொந்தம்... அவர் மூலமாதான் பார்க்க முடிஞ்சுது.... நான் ரொம்ப கேட்டுக்கிட்டதாலதான் இன்னைக்கு இங்க வந்தாரு... நீங்க எப்படியாவது வீட்டுல பேசி மைத்தி அங்க சேர ஏற்பாடு பண்ணுங்க... இல்லை நான் வேணும்ன்னா மறுபடி வந்து மைத்தி அப்பாக்கிட்ட பேசவா... ஆனா உங்க வீட்டு பெரியவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை...”
“இல்லை சார், நீங்க இப்போ வர வேண்டாம்... நாங்க மொதல்ல பேசறோம்... பீஸ் எவ்ளோ பே பண்றா மாதிரி இருக்கும் சார்....”
“அதுலாம் இன்னும் கேக்கலைப்பா... அவர் வந்து இவங்க விளையாடறத பார்த்த்துட்டு சொல்லுறேன்னு சொன்னாரு... நான் நாளைக்கு அவர்கிட்ட பேசிட்டு சொல்லுறேன்... இது என்னோட கார்டு... அதுல என் ஆபீஸ் நம்பர் இருக்கும்... ஒரு ரெண்டு நாள் பொறுத்து நீ போன் பண்ணு... நான் எல்லா விவரமும் கேட்டு வைக்கிறேன்....”
“ரொம்ப நன்றி சார்... எங்க வீட்டு பொண்ணுக்காக நீங்க இவ்ளோ தூரம் மெனக்கிடறதுக்கு...”
“இதுல என்னப்பா இருக்கு... மைத்தி அவ்ளோ அபாரமா விளையாடறா... கொஞ்சம் தூண்டி விட்டா போதும்... இந்தியா டீம்ல விளையாடற அளவு அவக்கிட்ட திறமை இருக்கு... அதைவிட பெரிய விஷயம் எங்க வீட்டு சின்னக்குட்டியோட முழு சப்போர்ட்.... துளசி அவளோட மைத்திக்காவ அகாடமில சேர்க்காம ஓயமாட்டா... ரெண்டு வாரமா மைத்தியை பார்க்காம என்னை பிச்சு பிடிங்கிட்டா...”
“நீங்க எவ்ளோ பரந்த மனப்பான்மையோட இருக்கீங்க சார்... எல்லார் வீட்டுலயும் பெரியவங்க