ஓட்டப்பந்தயத்துல சாதனை படைச்சா மாதிரி நம்ம மைத்தியும் நாளைக்கே கிரிக்கெட்ல எத்தனையோ சாதனைகள் படைக்கலாம்... அதை நாம முட்டுக்கட்டை போட்டு தடுக்கக்கூடாது...”
“அத்திம்பேர் நீங்க என்ன சொல்றேள்... மைத்தியை கண்டிப்பா அங்க சேர்க்கலாம் அத்திம்பேர்... அவ பெரிய ஆளா வருவா...”, பத்ரி நேரடியாக மைத்தியின் தந்தையிடம் பேச ஆரம்பித்தான்... ரகுவும் அனைவரையும் சமாளிப்பதைவிட அவர் ஒருவரை சமாளிப்பது உசிதம் என்று அவரிடமே பேச ஆரம்பித்தான்...
ரகுவும், பத்ரியும் மாற்றி மாற்றி மைத்தியின் திறமையையும், அவள் அங்கு சேர்ந்தால் அதனால் அவளுக்கு ஏற்படப்போகும் வளர்ச்சியையும் பற்றி பேசி பேசி அனந்துவை கரைத்தார்கள்... இவர்கள் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருக்க தாத்தாவும், பாட்டியும் உள் நுழைந்ததை யாரும் கவனிக்கவில்லை...
ரகுவும், பத்ரியும் பேசுவதை கேட்ட சுப்பிரமணியம் தாத்தா கோவத்துடன் முற்றத்திற்குள் நுழைந்தார்.....
தொடரும்
Next episode will be published on 22nd July. This series is updated weekly on Wednesday mornings.