தயக்கங்கள் விலக்கிக் கதவினைத் தட்டினான் ஆதித்யா.
"கதவைத் திறடா!" அவன் வார்த்தைகள் மதிக்கப்படும் என்ற நம்பிக்கை அவனுடையது! அந்நம்பிக்கை மெய்யானதே! அவன் குரல் கேட்ட சில நொடிகளுக்கு எல்லாம் கதவானதுத் திறவப்பட்டது! அவன் உடைந்துப் போயிருக்கிறான் என்பதுத் தெள்ளத் தெளிவாய் அவன் முகத்தினில் பிரதிப்பலித்தது! இருவருக்குள்ளும் மௌனங்கள் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்க, அதனை மெல்ல குலைத்தது உடையானின் குரல்!
"நான் உங்கக்கிட்ட எந்தக் கேள்வியுமே கேட்டத்தில்லைண்ணா! நீங்க சொன்னதைக் கூட நான் மீறியதில்லை. அம்மா பேச்சை கேட்பேனோ இல்லையோ உங்க வார்த்தைக்கு எதிரா நான் நடந்ததே இல்லை! முதல்முறையா நான் கேள்விக் கேட்கட்டா?உங்களுக்கு எல்லா உண்மையும் தெரியும் தானே?" வாழ்வில் முதன்முறையாய் நொறுங்கிப் போன அவன் குரலை கேட்டவன் ஆடிப்போனான். அவன் விழிகளில் பதிந்த இளவலின் வாடிய முகம் எவ்வித பொய்களையும் அவனை உரைக்கவிடாமல் தடுத்தது. பொய் உரைப்பதனை விடவும், மெய் அச்சூழலில் அனைத்தையும் காக்கும் என்ற நம்பிக்கையை ஆதாராமாக்கி, ' ஆம்' என்றுத் தலையசைத்தான் தமையனும்!
"ஏன்கிட்ட ஏன் சொல்லலை? எதுக்காக மறைத்தீங்க?" இம்முறை தேங்கிய கண்ணீரை கட்டுப்படுத்தும் வல்லமையை அவன் முழுதுமாய் இழந்திருந்தான்.
"என்ன நடந்தது?" என்று மனம் வெடித்துவிட,
"நடந்த எல்லாத்துக்கும் நான் தான் காரணம்!" என்ற தர்மாவின் குரல் அனைவரின் கவனத்தினைத் தன்பால் ஈர்த்து நடுமையமாய் நின்றது.
தொடரும்!
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Nenjil thunivirunthaal story main page
{kunena_discuss:1163}