(Reading time: 13 - 25 minutes)
Nenchil thunivirunthaal

போனாள். இருவரது மௌனமும் எங்கிருந்தோ எவரோ கதறிய ஓசைக் கேட்டு கலைந்தது.

"ஐயோ! கங்கா! ஓடி வந்துவிடு!" என்று இரு பெண்கள் தலைத்தெறிக்க ஓட, அதைக் கண்டவர்கள் மனம் பதைபதைத்துப் போயினர்.

"அண்ணி! நீங்க வர வேணாம். இங்கேயே இருங்க!" என்று அவசர அவசரமாய் ஓடினான் உடையான். யாருக்கு எத்துன்பம் என்று பதைப்புடன் அவன் நோக்க, அச்சத்தில் முகம் வெளிறியப்படி அவன் தேவியானவள் நிற்க, எதிரில் படமெடுத்து சீறிக் கொண்டிருந்தது ஓர் நாகம்! அக்காட்சியினைக் கண்டவனுக்கு ஏதும் நினைவில் இல்லை, ஏன், அவனது எண்ணங்கள் கூட நினைவில் இல்லை. தன்னையறியாமல்,

"கங்கா!" என்றுப் பதறினான் உடையான். அவளோ அச்சத்தில் கதறி அழத் தொடங்கினாள்.

"இரு! இரு! அசையாமல் இரு!" என்றவன் அவளுக்கு முன்னால் சென்று நின்றான். அந்நாகமோ தன்னால் இயன்றவரை சீறி நின்றது. ஒரு நாகத்தினை எங்ஙனம் சாந்தப்படுத்துவது என்பதனை அவன் உணராமல் இல்லை.

"மெதுவா பின்னாடிப்போ!" மெல்லியதாய் அவன் கூற, குழப்பத்தில் அவனை நோக்கினாள் கங்கா. அவனது கவனமோ நாகத்திடமே நிற்க, மெல்ல அவளது கரம் பற்றி பின்னால் அவன் நகர்த்த அவளும் பின்னால் நகர்ந்தாள். அவ்விருவரும் பின் வாங்குவதனைக் கண்ட நாகத்தின் சீற்றம் மெல்ல மெல்ல குறைந்தது. ஒரு சில நிமிடங்கள், தன் விழிப் பார்வையை நாகத்திடமே நிலைப்பெற்றிருக்க, அவனை பயமுறுத்த எண்ணி, அது சீற, அலறிப் போனாள் கங்கா. அவளது அவ்வோசை இருவருக்கும் எமனாகும் என்று அறிந்தவன் அவளதுப் புஜத்தினை மென்மையானத் தீண்டியிருந்த கரத்தினைத் தன்னை அறியாமல் அழுந்தப் பற்றி சாந்தப்படுத்தினான். ஓரிரு நிமிடங்களுக்குள் எல்லாம் அந்நாகம் என்ன நினைத்ததோ தான் வந்த வழித் திரும்பிச் சென்றது அது! நிலைமை இயல்பாக, பெருமூச்சுடன் அவளை நோக்கித் திரும்பியவனின் கால் புற்களால் இடறி, தடுமாறியவனாய் அவள் மேல் சரிந்தான் உடையான். அவளும் அதனை எதிர்நோக்காததால் தடுமாறி விழ, சட்டென எதிர்நோக்கா நொடியில் சந்தித்துக் கொண்டன இரு இதழ்களும்! திட்டமிடாமல் திட்டமிட்டு நிகழ்ந்த அச்சங்கமம் இருவரையுமே உறைய வைத்தது முக்கியமாகப் பாட்டுடைத் தலைவனை! என்னத் தான் நிகழ்ந்ததோ என்ற அச்சத்தில் அவன் வார்த்தையினை மீறி அங்கு வந்த மாயாவின் விழிகள் அந்நிகழ்வுக்குச் சாட்சியாக, அவளோ முகத்தினை வேறுத் திசைக்கு மாற்றியவளாய் அங்கிருந்து ஓடியே விட்டாள். தனது நிலையினை உணர்ந்தவனாய் அவளை நீங்கி அவன் எழ இருவருக்கும் சங்கடமே விளைந்தது! இப்படியா வந்து நிகழ வேண்டும் என்று அவனுள் ஓர் காழ்புணர்ச்சி!முதன்முறையாய் கிட்டிய ஒரு பெண்ணின் நெருக்கம் உதிர ஓட்டத்தையே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.