"என்னக் கண்ணா? என்னாச்சு?" அவனோ உறக்கக் கலக்கத்தில் அவரது வார்த்தைகளைச் சற்றும் சட்டை செய்யாமல், சென்று அவரது மடியில் தனது சிரத்தினைப் பதித்துக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டான். உடன் ஓர் துணை இருக்கிறது என்ற துணிவில் உடனடியாக உறங்கியும் போனான் உடையான். அவனது இச்செய்கையைக் கண்டு புன்னகைத்தவராய், புத்தகத்தினை மூடி வைத்து, அவன் உறக்கம் தடைப்படாமலிருக்க, இரவு ஔியை உயிர்ப்பித்தவராய், கேசத்தினைக் கோதியவண்ணம் தானும் உறங்கிப் போனார் தர்மா அமர்ந்தவண்ணமே! தன் புதல்வனின் நிம்மதியினைக் காட்டிலும் அத்தாய்க்கு வேறேதும் பெரியதாகப் படவில்லை. தன்னை மறந்த நிலையில் தான் கொணர்ந்த தலையணைகளை இறுகத் தன்னோடு பிணைத்துக் கொண்டான் உடையான். அங்கே, இதற்கு வினையாக, காரணமே இன்றி, தன்னருகே இருந்த தலையணைகளை இறுகப் பற்றி உறங்கத் தொடங்க, ஏதோ காரணம் புரிந்ததாய் தன்னுள்ளே புன்னகைத்துக் கொண்டது அந்த வெண்ணிலவும்!
தொடரும்!
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Nenjil thunivirunthaal story main page
{kunena_discuss:1163}