(Reading time: 8 - 16 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

ஆண்களுக்கான விளையாட்டாகவே கருதிய காலகட்டம்.... இந்திய அளவிலேயே மிக சொற்ப வீராங்கனைகளே விளையாடினர்... அதனால் பொதுவாக பெண்கள் கிரிக்கெட்டில் வயது வரம்பு பெரிதாக நிர்ணயிக்கப்படவில்லை... எட்டு வயது பெண் இந்திய அளவில் விளையாடிய காலகட்டம் அது.....

ரஞ்சி கோப்பை மாநிலங்களுக்கு இடையிலாக நடைபெறும் போட்டி.... இதில் நன்றாக விளையாடும் வீரர்கள் அடுத்து இந்திய அணிக்கு தேர்வாக நிறைய வாய்ப்புகள் உண்டு... அதே போல் இந்திய அளவில் விளையாடும் வீரர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்பார்கள்.... எனவே போட்டி சற்று கடுமையாகவே இருக்கும்....

இருவரும் தேர்வாகியதால் அவர்களுக்கு தேர்வான மற்ற வீராங்கனைகளுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.... தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் அவர்களுக்கு பயிற்சியளித்தார்... முதல் போட்டி தமிழ்நாட்டு அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நடைபெறுவதாக இருந்தது.... முதல் போட்டி பஞ்சாபில் நடக்க மைத்திக்கு முதல் சோதனை ஆரம்பித்தது... இதுவரை அவள் சென்று வந்த அனைத்து போட்டிகளும் உள்ளூரிலேயே நடைபெற பெரிதாக அவள் சென்று வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை... முதல் முறையாக மாநிலம் விட்டு செல்ல வேண்டிய கட்டாயம்.... கற்பகம் பாட்டி மைத்தி வெளி மாநிலத்திற்கு செல்வதை கடுமையாக எதிர்த்தார்....

ரகுவின் ஆதரவு இல்லாத பட்சத்தில் மைத்தி எப்படி பாட்டியை சமாளிக்கப் போகிறாள்... பார்க்கலாம்....

தொடரும்

Next episode will be published on 2nd Sep. This series is updated weekly on Wednesday mornings.

Go to Kanavu Meippadum story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.