(Reading time: 13 - 26 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 15 - சாகம்பரி குமார்

டாக்டர் ஷீலா சொல்லியிருந்தபடி சர்ச்சுக்கு அவரை பார்க்க சத்தியனும் ரஞ்சனும் சென்றனர். அவர் அவர்களுக்காக சர்ச்சுக்கு வெளியே காத்திருந்தார்.

ஷீலாவை பார்க்கவும் சத்யன் அவருக்கு வணக்கம் தெரிவித்தான். அவர் அருகில் சென்று,

" வணக்கம் டாக்டர். எங்களிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொல்லி இருந்தீர்கள்" என்றான்.

"ஆமாம்... அது சற்று முக்கியமான விஷயம் தான். அதை மேலும் வளர்க்க நான் விரும்பவில்லை. அதனால் தான் உங்களை அவசரமாக சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். ரஞ்சன்… நீங்களும் இங்கே இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன். ஏனெனில் உங்கள் நண்பருக்கு நீங்கள் விஷயத்தை எடுத்துச் சொல்லவும் முடியும்" என்றார்.

"டாக்டர் நான் உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நேற்று இரவு நடந்தது சற்றும் எதிர்பாராத செயல். அந்த இடத்தில் நடந்ததை நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். ஏனெனில் சத்யன் அப்பொழுது மீராவின் நினைப்பில் இருந்தான்."என்று ஆரம்பித்த ரஞ்சன்… அந்த சம்பவத்தின் பிண்ணனியில் இருந்த விஷயத்தை விளக்கினான்.

"எப்போதும்… ஒரு சம்பவம் நமது வாழ்க்கையில் நடக்கின்ற போது.. அதே போன்று ஏற்கனவே நடந்த ஒரு சம்பவம் நாம் நினைவுக்கு வரும் அல்லவா… அது போலத்தான் அவன் நேற்று ரேச்சல் இடத்தில் மீரா இருப்பதாக நினைத்து விட்டான். அதே போல ஒரு மோசமான சம்பவம் ஏற்கனவே நடந்து இருந்தது. மீராவின் நெருங்கிய தோழி ஒருத்திக்கு இதுபோல நடந்தது." என்று சொல்லியபடி சத்யனை முறைத்தான். ஏதாவது சொல்லி சமாளித்து தொலைக்க மாட்டியா என்று பார்வையால் கடிந்தான். உடனே சுதாரித்த சத்யனும்,

" ஆமாம்… டாக்டர் அன்றைக்கு மீரா ரொம்பவும் மனமுடைந்து போய் இருந்தாள். எனக்கு அந்த நினைவே வந்துவிட்டது. மற்றபடி எனக்கு வேறு எதுவுமே நினைவில் இல்லை. என்னை மன்னித்து விடுங்கள்" என்றான்

"ரொம்ப நல்லது தம்பி. நீங்கள் இருவருமே உண்மையை பேசுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் உங்களை இங்கு அழைத்ததற்கு விளக்கம் சொல்லவே தேவை இல்லாமல் நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள். நேற்று இரவு நடந்தது எனக்கு சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் நான் உங்களை நம்புகிறேன் அதற்கு முன்பு ஒரு முக்கியமான உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரும் தெரிந்து கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்" என்றார்.

அவர் சொல்வதைக் கேட்கவும் ரஞ்சனுக்கும் சத்தியனுக்கும் குழப்பம் வந்தது.

அவர்கள் இருவரும் சொன்னதை ஷீலா நம்பினால்…. சரிப்பா மன்னிச்சிட்டேன்… அப்படின்னு சொல்லியிருக்கனும்... மன்னிப்பு கேட்டதை அவர்களும் ஏற்றுக் கொண்டதாகச் சொல்லி விட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.