அடிப்போட்டார் பார்வதி.
"எவ்வளவுத் தைரியம்டா உனக்கு? என்கிட்டயே நாடகமாடுற?" என்று அவன் செவிகளை அவர் திருக, "ஆ.." என்றுக் கத்தினான் அசோக்.
"உன்னை என்னப் பண்றேன் பாரு!" என்று மீண்டும் ஒரு அடி போட முயல, அவனோ அவர் பிடியிலிருந்து விடுப்பட எத்தானிக்க, அவனைப் பிடிக்க முயன்றவர் தன்னையே அறியாமல் தரையில் பதிந்திருந்த பாசியில் கால் வைத்து இடர போக, அவரைத் தாங்கிப் பிடித்தான் அசோக். சட்டென அக்காட்சியினைக் காணும் எவருக்குமே, 'இங்கு என்ன நிகழ்கிறது' என்ற வினா எழும்பாமல் இருக்காது!
"என்னடா பண்ற படவா ராஸ்கல்!" என்று சமாளித்தவராய் அவர் எழ,
"ஐயயோ..பாட்டி! நீங்க விழ போறீங்கன்னுத் தான் பிடித்தேன்!" என்று அவரிடம் இருந்துத் தப்பிப் பிழைக்க ஓடினான் அசோக்.
பிரிந்த உறவுகள் அனைத்தும் பல ஆண்டுகள் கழித்து ஒவ்வொன்றாக சேர்ந்துக் கொண்டிருக்க, அனைவரும் அன்பென்னும் ஆனந்த பல்லக்கில் உலா வந்திருக்க, காலம் மட்டுமே அறிந்திருக்கும் அடுத்ததாக வரும் விபரீதம் யாதென்பதனை!
தொடரும்!
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Uyiril kalantha urave story main page
{kunena_discuss:1149}