காரணத்தை சொல்லி அவளை அப்படியே நிறுத்தி சென்று விட்டான். மீண்டும் மனதில் அடிபட்ட வலியுடன் ஷீலா மேற்படிப்பு படிக்க சென்னை சென்று விட்டார்.
சில மாதங்கள் கழித்து தந்தை இறந்தபின்…. மேத்யூஸ் பிரிந்து போன தம்பியை ஏமாற்றாமல் தந்தை தந்த சொத்தில் சரிபாதியை பணமாக மாற்றி அவனுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தான். பின்னர் தம்பி மதுரையில் மருத்துவராக புகழ் பெற்றதை கேள்விபட்டாலும் அவனை சந்திக்க விரும்பவில்லை. ஏனெனில் ஃபெலிக்ஸ் மதம்மாறி வசுமதியை திருமணம் செய்து கொண்டதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை… அவன் ஃபெலிக்ஸையும் மன்னிக்கவில்லை… ஷீலாவையும் மன்னிக்கவில்லை…
சில வருடங்கள் கழித்து எஸ்தரை மணந்து கொண்டான். அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ரேச்சல். ரேச்சலுக்கு இரண்டு வயதிருக்கும்போது எஸ்தர் இறந்து போனாள்… ரேச்சலை எஸ்தரின் அம்மா வளரத்தாலும் மேத்யூஸின் அம்மாவிற்கு அதில் விருப்பமே இல்லை.
அந்த சமயத்தில் ஃபெலிக்ஸிடமிருந்து கடிதம் வந்தது. அவன் புதிதாக கட்டியிருக்கும் மருத்துவமனைக்கான அழைப்பிதலுடன் அவனுடைய குடும்ப புகைபடத்தையும் அனுப்பி இருந்தான். அதில் அவனும்… வசுமதியும்… கூடவே ஒரு குழந்தையும் இருந்தனர். அவனுக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது. ஒரு சாயலில் அந்த குழந்தையும் ரேச்சல்போலவே இருந்தது… அப்படியில்லை மேத்யூஸ் அம்மாவின் சாயலில் இருந்தது. அதன் பிறகும் தம்பியை சென்று பார்க்க மனம் விரும்பவில்லை. ஆனால் ஒரு.விஷயத்தை புரிந்து கொண்டான். ஃபெலிக்ஸ் தன்னுடைய கடிதத்தில் ஷீலாவை குறிப்பிட்டிருந்தான். அவனுக்கும் வசுமதிக்கும் இருந்த காதல்பற்றி எதுவும் ஷீலாவிற்கு தெரியாது . ஏனெனில் ஷீலாவிற்கு மேத்யூஸை மிகவும் பிடிக்கும்… அவள் அவனிடம் இதுபற்றி உளறி விடுவாள் என்று மறைத்ததை தெரிவித்திருந்தான்.
இதை அறிந்த மேத்யூஸிற்கு ஷீலாவிற்கு நடந்த அநியாயம் புரிந்து போக… அவளை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்டான். ஆன்ல் ஷீலா முன்போல இல்லை… மேத்யூஸ் மீது வைத்திருந்த அன்பு தாயில்லா குழந்தையான ரேச்சல் மீது மாறியது.
ரேச்சலிடம் அவளை இரண்டு பாட்டிகளும் நெருங்கவிடவில்லை…. ரேச்சலும் அப்படியே வளர்ந்தாள். பாட்டி இறந்த பின்புகூட ஷீலாவிடம் ஒட்டவில்லை.
இந்த கதையை சொல்லி முடிக்கவும்…
"அம்மா… அப்போது பாட்டி பேச்சை கேட்டு என் புத்தி கோளாறாகி இருக்கும். இப்போது நேராகி விட்டதுபோல… இனி எப்போதும் உங்களை விட்டு பிரியமாட்டேன்… இந்த உலகத்துலேயே எனக்கு நீங்கதான் முக்கியம்" என்று கட்டிக் கொண்டாள்.
"ஆனால் அம்மா… சித்தப்பா இப்போது எப்படி இருக்கிறார்." என்று கேட்டாள்.