மீரா சத்யனிடமிருந்து பிரிச்சு வைக்க ப்ளான் செய்திருக்கீங்க.."
"அது அத்தையோட ப்ளான்"
"ஏன் அப்படி செஞ்சாங்க?"
"மீராவோட பெயரில் வீடு, நிலம், தோப்புனு ஏகப்பட்ட சொத்து இருக்கு. அது அவளுக்கு தெரியாது. அத்தைதான் கார்டியன் என்பதால் அதை அவங்கதான் பார்த்துகிட்டாங்க. வாடகை வசூல்… நில குத்தகை… அப்படி இப்படினு வருமானம் வந்துச்சு"
"அப்படியே மெயின்ட்டெயின் பண்ணிருக்கலாமேடா… வர்ற காசை வச்சு நல்லாதான இருந்தீங்க. மீராவுக்கும் தெரியாதது உங்களுக்கு நல்லதுதான. அப்புறம் ஏன் இந்த புத்தி…"
"அந்த சொத்தை அனுபவிச்சுக்கலாம்… விற்க முடியாது. அதுக்கு மீராவோட அனுமதி வேணும்.. அவளுக்கு கல்யாணம் ஆனதுக்கு பிறகு வக்கீல் அவளிடம் பேசணும்னு சொல்லிட்டிருந்தார். அதோடகூட… அந்த சொத்து மீராவிற்கு பின் அவளுடைய குழந்தைக்கு போய்விடும்"
"அதனால…"
"ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டா நல்லதுனு நினைச்சாங்க…"
"அப்புறம்… வேற திட்டம் எதுவும் போடலையா?. "
"அதை மாமாவிடம்தான் கேட்கணும்"
"கேட்போம்டா… அந்தாளை வர்ற சொல்லி இருக்கேன்…. ரெணடு பேரும சேர்ந்து கதற போறீங்க"
இத்துடன் அந்த வீடியோ முடிந்து விட்டது…
"கேசவ் அவனுக்கு இன்னும் தெரியும். மறைக்கறான். மீரா அவங்க வீட்டிலிருந்து வெளியேற இவன்தான் காரணம். அவளை கத்தியை எடுத்து குத்த போயிருக்கான். அவள் பின்பக்க தோட்டத்திற்கு ஓடி போயிருக்கா. பக்கத்து வீட்டம்மா அவனை தடுத்திருக்காங்க. அதுக்குள்ள மீரா வீட்டை விட்டு வெளியேறி இருக்கா." சத்யன் கடினமான குரலில் சொன்னான்.
"சரி அதை அவங்கிட்டேயே கேட்போம். ஆனால் எது கேட்டாலும் அமைதியாக கேளுங்கள். இப்போது என்னுடன் வாருங்கள்" என்று அவர்கள் இருவரையும் ஸ்டேஷனுக்கு பின்பக்கம் இருந்த லாக்கப் அறைக்கு கேசவ் அழைத்து சென்றான்.
அங்கு பரத் கலவரமாக அமர்ந்திருந்தான். அவர்களை பார்க்கவும் பதட்டத்துடன் பேசினான்.
"நான்தான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே… இவங்களை எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?"
"எதிர்த்து பேசினால் அடி விழும்… பாலியல் வன்முறை வழக்குல உள்ளே வந்திருக்க… ஜாக்கிரதை" அருகிலிருந்த காவலர் எச்சரித்தார்.
"இல்ல… நான் பேசலை" பரத் முணுமுணுத்தான்.
"கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு…மீராவை கத்தியால் எதுக்கு குத்த போனே?"
"அப்படி ஒண்ணும் இல்ல…"