"அறை வாங்கப் போற..."
"அது வந்து.. நான் சும்மா மிரட்டினேன்."
"ஏன்?"
"அவள் எங்ககிட்டேயே நடிச்சிருக்கா… அவளுக்கு புத்தி சுவாதினம் இல்லாததுபோல நடிச்சிருக்கா…"
"நீங்களும் நடிச்சீங்கதானேடா… "
"அவளையும் அவள் குழந்தையையும் சத்யனிடமிருந்து பிரிக்கணும் என்று அத்தைதான் சொன்னாங்க."
"அதனால என்னவாகும்…?"
"மீராவிற்கு பின் மனுவுக்கு சொத்து வரும். அவளுக்கு கார்டியனா அத்தை இருக்க நினைச்சாங்க."
"கடைசிவரைக்கும் அந்த சொத்தை அனுபவிக்கலாம்னு நினைச்சீங்க.. வேற என்ன திட்டம் போட்டீங்க?"
"சார்… எனக்கு மீராவை கல்யாணம் பண்ணிக்கனும் என்ற ஆசைதான். சொத்துக்கெல்லாம் நான் ஆசை படவில்லை. சின்ன வயசிலேருந்து ஆசை பட்ட பொண்ணு சார்… இவன் திடீர்னு வந்து கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான்… மனசே உடைஞ்சு போச்சு… மாமாதான் இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சிட்டா கொஞ்ச நாள் கழித்து கல்யாணம் செய்து தர்றதா சொன்னார்…"
"அத்தைக்கு தெரியாம நீங்க சைட்டுல திட்டம் போட்டிருக்கீங்க…"
தலையசைத்த பரத் மூச்செடுத்து தொடர்ந்தான்…
"மீரா நாங்க தந்த மெடிக்கல் ரிப்போர்டை நம்பி விவாகரத்து செய்ய ஒப்பு கொண்டாள்… அப்போதான் இந்த ஆளுக்கு விபத்து நடக்கவும்… அவள் புத்தி சுவாதினம் இல்லாதது போல ஆகிட்டாள்…. அவளுக்கு அது தற்காலிகமானதுதான்… கொஞ்ச நாள்ல சரியாயிடும்னு சொன்னாங்க. அவளுக்கு புத்தி சுவாதினம் இல்லாமல் போனதால்.. மனுவின் பராமரிப்பு அவளுடைய அப்பாகிட்ட போயிடும். அதனால மீராவின் சொத்துக்கள் மனுக்கு போயிடும்… சத்யனை கார்டியனாக கோர்ட் நியமிக்கும்னு வக்கீல் சொன்னார்." தடுமாற்றத்துடன் தொடர்ந்தான்.
"அதனால அலளை கொலை செய்ய போனியா?"
"இல்லை சார்… மீராவுக்கு புத்தி சுவாதினம் இல்லாமல் போனதுனு சொன்னது பொய். அவள் எங்களிடம் நாடகம் ஆடி இருக்கா.. அவளுக்கு சொத்து பற்றியும் உயில் பற்றியும் யாரோ சொல்லி இருக்காங்க… அதனால மனுவை சத்யனிடம் சேர்க்க வேண்டும்னு இந்த மாதிரி