பார்த்தார்..
“சார் நான் கரெக்ட்டாதான் விளையாடினேன்.... துளசி அடிச்ச நிறைய பந்து mid-wicket கூட தாண்டலை.... எப்படி ஓடி இருக்க முடியும்... அதனாலதான் அவ ஸ்டார்ட் கொடுத்தும் நான் திரும்ப போக சொல்லிட்டேன்... அதே மாதிரி அவ கடைசியா அடிச்ச பந்து backward-point ல இருந்த fielder தடுத்துட்டாங்க.... அதான் நான் ரன் ஓட ஆரம்பிக்கலை....”
“நீ எத்தனை வருஷமா கிரிக்கெட் விளையாடற ராதிகா... mid-wicketல பந்து போகும்போது ஓட முடியாதுன்னு சொல்ற...”
“எட்டு வருஷமா சார்.... இல்லை சார் பந்து ரொம்ப வேகமா போச்சு... ஓடி இருந்தா மொதல்லையே ரன் அவுட் ஆகி இருப்போம்...”
“எட்டு வருஷம்.... ஹ்ம்ம் கிட்டத்தட்ட ஒரு நூறு மேட்ச்க்கு மேலேயே விளையாடி இருப்ப... இப்போ நீ சொன்ன ஒரு எக்ஸ்பீரியன்ஸ் பிளேயரா உன்னாலேயே ஒத்துக்க முடியுதா சொல்லு....”, கோச் கேட்க ராதிகா தலைகுனிந்தாள்...
“அடுத்து கேப்டன்.... மைத்ரேயியோட மூணு ஓவரும் எப்படி இருந்தது....”
“நல்லா போட்டா சார்.... எதிரணி அவ பௌலிங்ல கொஞ்சம் தடுமாறத்தான் செய்தாங்க...”, எதற்கு வம்பு என்று மைத்திக்கு ஆதரவாகவே பேசினாள்....
“அப்பறம் ஏம்மா அவளுக்கு மூணு ஓவருக்கு மேல கொடுக்கலை...”
“அது மத்தவங்க போட்டா விக்கெட் விழும்ன்னு நினைச்சு அவங்களுக்கு கொடுத்தேன் சார்.... மைத்ரேயி புதுசு... எதிரணில ஆடுறவங்களை பத்தி தெரியாது... அதுதான் சான்ஸ் எடுக்க வேண்டாமேன்னு அவளுக்கு வாய்ப்பு கொடுக்கலை....”
“முப்பது ஓவர்ல எடுக்காத விக்கெட்டையா அடுத்த பதினேழு ஓவர்ல எடுத்துடுவாங்க... சரி மைத்தி மூணாவது ஓவர்ல போட்ட பந்து பழம் மாதிரி உன் கைல வந்துச்சே ராதிகா... நீ ஏன் அதை பிடிக்கலை...”
“அது லேசா ஸ்லிப் ஆகிடுச்சு சார்.... அதான் பிடிக்க முடியலை...”
“எல்லா காரணமும் சொல்லி முடிச்சாச்சா... இன்னைக்கு விளையாடினதுல மைத்தி, துளசி தவிர எல்லாருமே அனுபவமுள்ளவங்க... இன்னைக்கு நீங்க விளையாடினது சரியான முறையான்னு சொல்லுங்க....”, பயிற்சியாளர் கேட்க அனைவரும் தலை குனிந்தபடி இருந்தனர்....
“பதில் சொல்லுங்க... பேசாம இருந்தா என்ன அர்த்தம்,,,,”
“சார் நாங்க எங்களோட நூறு சதவிகித ஆட்டத்தை கொடுத்தோம்... ராதிகாவுமே துளசி கூட ஆடும்போதுதான் தடுமாறினா... அதுக்கு பிறகு நல்லா ஆடி ஐம்பது ரன் எடுத்தாளே... பஞ்சாப் கூட ஆடும்போது எல்லாருமே அனுபவம் வாய்ந்த பிளேயர்ஸ்... அதனால சுலபமா வின்