பண்ணிட்டோம்... இந்த மேட்ச்க்கும் அதே டீம் இருந்து இருந்தா வின் பண்ணி இருக்கலாம்...”, தோல்விக்கு துளசியையும், மைத்தியுமே காரணம் என்று தோன்றும் வண்ணம் தலைவி பேசினாள்...
“இப்போ என்ன சொல்ல வர்றீங்க... துளசி, மைத்ரேயியை சேர்க்கலைன்னா ஜெயிருக்கலாம்ன்னு சொல்றீங்களா...”, கோச் கேட்க அப்படித்தான் என்பதுபோல் அனைவரும் மௌனம் சாதித்தனர்...
“நேத்து ராத்திரி நீயும், ஷைலாவும் யார் கூட போன் பேசிட்டு இருந்தீங்க ராதிகா...”
“அது வீட்டுக்குத்தான் சார் பேசிட்டு இருந்தோம்...”
“அப்படியா ரஞ்சன் உங்க வீட்டுலதான் தங்கி இருக்காரா ராதிகா...”
“சார் நீங்க என்ன சொல்றீங்க.... ரஞ்சன் சார் எதுக்கு எங்க வீட்டுல இருக்கணும்...”
“அப்பறம் எப்படி அவர் கூட நீங்க பேசினீங்க...”
“சார் நாங்க அவர்கூட எங்க பேசினோம்... வீட்டுக்குத்தான் பேசினோம்...”
“பொய் சொல்லாதீங்க... உங்க வீட்டுல இருந்தா போன் வந்தது....”
“ஆமாம் சார்... என்னோட அப்பாதான் பண்ணி இருந்தாரு...”
“நீங்க ரெண்டு பேரும் வந்து போன் பேசிட்டு இருந்தீங்களே அதுக்கு பக்கத்து ரூம்லதான் நானும் மேனேஜரும் இருந்தோம்.... இப்போ சொல்லுங்க யார் கூட பேசிட்டு இருந்தீங்க...”, கோச் கேட்க இருவரும் மாட்டிக்கொண்டதால் பயப்பார்வை பார்த்தார்கள்...
“என்னை பார்த்து பிரயோஜனம் இல்லை... உண்மையை சொல்லுங்க...”
“அது ரஞ்சன் சார் கிட்டதான் பேசினோம்...”
“உங்களுக்கு எதுக்கு அவர் போன் பண்ணினார்...”
“அது சும்மா பஞ்சாப் கூட மேட்ச் எப்படி போச்சு அப்படின்னு கேட்டார்... அப்பறம் இன்னைக்கு விளையாட சில டிப்ஸ் கொடுத்தார்.....”
“ஓ நல்ல விஷயம்தானே... இதை சொல்றதுல என்ன பிரச்சனை... எதுக்காக மொதல்ல கேட்டவுடனே வீட்டுக்கு பேசினோம்ன்னு சொன்னீங்க...”
“அது.... நீங்க கோச் இருக்கும்போது அவர் டிப்ஸ் கொடுத்தார்ன்னு சொன்னா உங்களுக்கு கோவம் வருமோன்னு நினைச்சு அப்படி சொல்லிட்டோம் சார்....”
“நல்ல எண்ணம்தான்.... ஆனா நம்புற மாதிரிதான் இல்லை... சரி கதை சொன்னதெல்லாம் போதும்... உண்மைய சொல்லுங்க...”
“நாங்க உண்மைதான் சொல்றோம் சார் ....”
“எது உண்மை... சொன்னது அத்தனையும் பொய்.... நேத்து நீங்க என்ன பேசுனீங்கன்னு சொல்லவா.... மாவட்ட வாரியான போட்டில அவருக்கும், பாஸ்கருக்கும் மோதல்.... அவர்