(Reading time: 16 - 31 minutes)
Priyamaanavale
Priyamaanavale

பாய்பிரெண்ட் இல்லைனா எங்கள்ல யாராவது ஒருத்தரை சூஸ் பண்ணு...மத்தவங்க உன்னை ரேகிங் பண்ணாம நாங்க பார்த்துக்கறோம்" என்றபடி இன்னும் ஒருவன் அவளின் அருகே இருந்த இருக்கையில் அமர, கோபத்துடன் ஏதோ சொல்ல வந்த தமிழ்மாறன், தமிழ்செல்வியில் பார்வையில் அமைதி ஆனான். அவள் அவர்களை கண்டு பயந்ததை போல தெரியவில்லை. அவள் இந்த சூழ்நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு. அவன் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.

"அண்ணா..." அவள் அருகே அமர்ந்தவனை பாவம் போல முகத்தை வைத்து கொண்டு தமிழ்செல்வி அழைக்க, அவளின் அண்ணா என்ற அழைப்பில் பேயறைந்தவனை போல முழித்தவனை பார்த்து சிரிப்பை அடக்குவது தமிழ்மாறனுக்கு கடினமாக இருந்தது.

"அண்ணாவா..." அருகே நின்றிருந்தவன் கேட்க, "ஆமா அண்ணா... இதோ இங்க உக்காந்துருக்கானே தமிழ்மாறன். இவன் கூட தான் ஸ்கூல்ல இருந்து ஒண்ணா படிக்கிறேன். எவ்வளவோ வழியில என் மனசுல இருந்ததை சொல்ல முயற்சி பண்ணிட்டேன் ஆனா இந்த மரமண்டைக்கு ஏறவே இல்லை. நேரா சொல்லவும் எனக்கு தைரியம் வரலை. இதோ இப்போ என்னை சுத்தி அஞ்சு அண்ணன்க இருக்கீங்க. அந்த தைரியத்துல இப்போ நான் சொல்றேன். இதோ இந்த மாறனை தான் நான் லவ் பண்றேன்" என்றபடி தன்னுடைய முகத்தை மூடி கொண்டு வெட்கப்பட, அருகே அமர்ந்தவன் அதிர்ச்சியுடன் எழ, "என்னடா இந்த பொண்ணு கடைசில நம்மளை சாட்சியாக்கிட்டா" என்று புலம்பியபடி அங்கிருந்து மெதுவாக நகர, தன முன்னே முகத்தை கைகளால் மூடியபடி அமர்ந்திருந்த தமிழ்செல்வியின் தலையில் கையில் இருந்த புத்தகத்தால் அடித்தான் தமிழ்மாறன்.

"ஷ்ஷ்ஷ்...வலிக்குது எரும" என தமிழ்செல்வி அவனை முறைக்க, "வலிக்கட்டும்  இன்னும் எத்தனை நாளைக்கு இதே ரீலை ஓட்ட போற... உன்னால எனக்கு போற இடம் எல்லாம் ஒரே எதிரிகளா ஆயிட்டு இருக்காங்க. என்னைக்கு எவன் என்னை போட்டு தள்ள போறான்னு தெரியல " என்றவனை பார்த்து அப்பாவியாக சிரித்தவள் "என் உயிர் நண்பனே இப்படி சொல்லலாமா... யாரவது என்கிட்டே ஏதாவது கேட்டா என்னால முகத்துல அடிச்ச மாதிரி நோ சொல்லமுடியாதுனு உனக்கு தெரியாதா??? அதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே கேட் பண்ணிவிட்டுடா??? எப்படி என் ஐடியா....!!! இதுவரைக்கும் இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆயிருக்கு சோ இன்னும் கொஞ்சம் வருஷம் இதையே ரீல் தான் ஓடும். அதுக்கும் சேர்த்து இப்போவே உனக்கு என்ன வேணும் சாப்பிட? சொல்லு நான் வாங்கிட்டு வரேன்... " என்றபடி அப்பாவியாக பார்த்தவளை கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை தமிழ்மாறனால்.

இதை படித்து முடிக்கையில் ராமின் முகத்தில் புன்னகை அரும்பியது. அவளுக்கும்

22 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.