அவர்கள் செல்வதை நின்று பார்த்து கொண்டிருந்த நந்துவும் விக்னேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் அர்த்தத்துடன்.
விக்னேஷின் இடைஞ்சல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. வேண்டும் என்றே அனாட்டமி வகுப்பில் அவளிடமே கேள்வி கேட்பது, லேபிள் அவளின் கையை பற்றி சொல்லி தருவதை போல சீண்டுவது என்று விக்னேஷ் அவளை தொந்திரவு செய்ய, வகுப்பில் உள்ளவர்கள் இருவருக்கும் காதல் என்று பேச தொடங்கியிருந்தனர்.
நந்து விக்னேஷின் பேச்சை கேட்டு கொண்டு தமிழ்செல்வியின் மேல் வெறுப்பை உமிழ்த வண்ணம் இருந்தவன் ஒருநாள் செய்த காரியத்தில் தமிழ்செல்வியின் பொறுமை பறந்து போயிருந்தது.
"அம்மா நான் ஹண்ட்ரேட் பெர்சென்ட் நிச்சசயமா சொல்றேன். அந்த தமிழ் செல்வியும் மாறனும் லவ் பண்றங்க. எப்போ பாரு ஒண்ணா கையை கோர்த்துட்டு ஏதாவது ஒரு மரத்துக்கு அடியில் தனியா உக்காந்து...சே எனக்கு சொல்லவே அசிங்கமா இருக்கு" நந்து அவன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருக்க "நந்து..." என்று ஓங்கி ஒலித்த தமிழின் குரலில் இருவரும் ஒரு நிமிடம் நடுங்கி போயினர். நந்துவின் அருகே வந்தவள் அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.
"ஏய்ய்ய்.... " அவள் தன மகனை அடித்ததும் தமிழின் சித்தி கோபத்துடன் எழ, கையை உயர்த்தி அவரை நிறுத்தியவள் "நீங்க பண்ண வேண்டியதை நான் பண்ணிருக்கேன்" எனவும் அவர் வாயை மூடி கொள்ள நந்துவின் புறம் திரும்பியவள் "ஒரு அக்காவா உன்னை இன்னும் என் தம்பியா நெனைக்கிறதால உனக்கு நான் ஒரு அட்வைஸ் பண்றேன் கேட்டுக்கோ. இன்னொரு முறை என்னை பத்தியும் என் பிரென்ட் பத்தியும் தப்பா பேசுனா அடுத்த முறை பேச இந்த வாய் இல்லாம பண்ணிடுவேன் ஜாக்கிரதை" என்றவள் விறுவிறுவென தன்னுடைய அறையை நோக்கி சென்றாள்.
"நந்து இனிமேல் இதை பத்தி பேச வேண்டாம். உங்க அப்பாக்கு தெரிஞ்சா தோலை உரிச்சிடுவாரு" என நந்துவிடம் அவன் அம்மா சொல்ல, "இல்லைம்மா நான் உண்மையா தான் சொல்றேன். கண்டிப்பா அதுக்கான ப்ரூப்போட வந்து அப்பாக்கு காட்றேன்" என்றவள் வேகமாக வண்டியை கிளப்பி செல்லுவது அறையில் இருந்த தமிழ்செல்விக்கு கேட்டது.
"அவன் பேசியதை எண்ணி அவள் உடல் கூசியது. சே ஒரு பொண்ணு ஒரு பையனோட பேசுனாவே இப்படி தப்பா தான் பேசுவார்களா" என அவளுக்கு வருத்தமாக இருந்தது.
இப்படி நந்து மற்றும் விக்னேஷின் தொந்தரவுகளுக்கு அவளின் சித்தியின் இம்சைகளுக்கும் இடையே அவள் மூன்றாம் வருடத்தை எட்டி இருந்தாள்.
"மாறா உனக்கு இது தானே கடைசி செமஸ்டர்?? அப்பா உனக்காக இங்க ஹாஸ்பிடல்லயே