தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 04 - ஜெபமலர்
மருத்துவமனையின் வளாகத்திற்குள் நுழைந்தவள் வேகமாக தன் டூவீலரை பார்க் செய்துவிட்டு சாவி கூட எடுக்க மறந்து ரிசப்ஷன் நோக்கி ஓடினாள் ஜனனி..
எக்ஸ்க்யூஸ் மி மேம் என்ற ஜனனியின் குரலை கேட்டதும் ரிசப்ஷனில் இருந்த பெண் தலை நிமிர்த்தி பார்த்தாள்.
ஜனனியின் முகத்தைப் பார்த்ததுமே அவளது பதற்றம் ரிசப்ஷனிஸ்ட்க்கு புரிந்து கொள்ள மேம் நீங்க யாரை பார்க்க வேண்டும் என்றாள்
நான் தனு தனுவை பார்க்க வேண்டும் அதாவது தன்ஷிகா என்று ஜனனி சொல்ல அந்தப் பெண்ணோ மேம் இது சைல்ட்ஸ் செக்ஸன் அதனால் நீங்கள் குழந்தையோட அப்பா பெயர் என்ன என்று சொல்ல முடியுமா என்றாள்.
அப்பா பெயரா என்று அவள் யோசிக்க தனுவின் அப்பா பெயர் தனக்கு தெரியாதே... இப்போது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருக்க அவளின் பதற்றத்தையும் கவலையையும் உணர்ந்தவள் என்ன பிராப்ளம் அந்த குழந்தைக்கு என்று மீண்டும் அந்த ரிசப்ஷனிஸ்ட் கேட்க ஃபுட் பாய்சன் என்று சொன்னார்கள் என்றாள் ஜனனி.
அந்த குழந்தையா ஸ்ட்ரைட்டா போயி ரைட்ல கட் பண்ணுங்க பர்ஸ்ட் ரூம் தான் என்று சொல்ல தேங்க்யூ என்று சொன்னவள் அங்கிருந்து நகர முயற்சித்தாள். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு நர்ஸ் யாரு... அந்த பொண்ணோட அம்மாவா, குழந்தையை எப்படிப் பார்த்துக்கணும் கூட உங்களுக்கு தெரியாதா.. ஒரு பச்சைக் குழந்தைக்கு இப்படியா பிரிட்ஜில் வைத்து எடுத்த சாப்பாடெல்லாம் கொடுப்பீங்க என்று அவளை கடுமையாக பேச அவளோ எதுக்கும் பதில் சொல்லாமல் சாரி சாரி என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நடந்தாள் இல்லை இல்லை ஓடினாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவள் அறைக்குள் சென்றதுமே கவலையோடு நின்ற ஸ்வீனா தான் ஜனனியின் கண்ணில் பட்டாள். ஓடிச்சென்று அவளின் கையைப் பிடித்துக்கொண்டாள் ஜனனி. தனுக்கு என்ன ஆச்சு என்றாள்.
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை ஜனனி.. இப்ப அவ நார்மல் ஆயிட்டா. ஸ்லீப்பிங் டேப்லெட் கொடுத்திருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து அவள் முழித்துவிடுவாள். உட்கார் என்று சொல்ல ஜனனிக்கு இன்னும் பதட்டமாகவே இருந்தது.
அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள் பெட்டில் படுத்து இருந்த தனுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்து ஸ்வீனா ஆதரவாக ஜனனியின் கையை பிடித்துக்கொண்டே ஜனனியின் பயப்படுவதற்கு எதுவுமில்லை. நான் தனியா இருக்கிறதுனால கொஞ்சம்