அவள் பேசும் விதத்தை பார்க்க பார்க்க ஜனனிக்கு அதிசயமாக இருந்தது. குட்டி குழந்தை என்ன அழகா பேசுறா... அவளுடைய செயல்கள் எல்லாம் எவ்வளவு அழகா இருக்கு என்று நினைத்தவள் அவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். போனில் பேசிக் கொண்டிருந்தாலும் தன்னை பார்த்துக்கொண்ட ஜனனியை பார்த்த தன்சிகா என்ன ஆச்சு என்று கேட்க ஜனனி ஒன்றுமில்லை என்று தலையாட்ட அவள் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தவரிடம் ஜானு பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
என்னை எப்படி எல்லாம் பார்த்துக் கொள்கிறார்கள் என்று ஜனனியை பற்றி அவள் பேச ஆரம்பிக்க அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள் ஜனனி.
சாப்பிட்டு முடித்ததும் அவளை தன் மடியில் படுக்க வைத்து தாலாட்டு பாடி தூங்க வைத்தாள். அது பழைய நினைவுகளை தூசி தட்டி விட ஏனோ நிம்மதியற்று இருப்பதுபோல தெரிந்தது ஜனனிக்கு.
இந்த நினைவுகளை மறக்க நினைத்தால் கூட மறக்க முடியவில்லையே என்று நினைத்தவள் எப்படியோ சிறிது நேரத்திற்கு அப்புறம் உறங்கியும் போனாள். இப்படியே ஒரு வாரம் கழிந்தது.
அன்று மாலை ஸ்வீனாவிற்கு என்கேஷ்மெண்ட் பங்க்ஷன். அதனால் அதற்கு ஏற்ப டிரஸ் வாங்கலாம் என்று தனுவையும் ஆயத்தப்படுத்தி கொண்டிருந்தால் ஜனனி.
அந்த நேரம் சரியாக அழைத்திருந்தால் ஸ்வீனா. எப்படி இருக்கீங்க பங்க்ஷன் எப்படி போயிட்டு இருக்கு.. மேடம் ரொம்ப பிசியா இருக்கீங்க... உங்க பேச்சில் கூட மின்னல் வெட்டுது. இப்பவே கல்யாண களை வந்து விட்டது என்று வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாகவே பேசியிருந்தாள் ஜனனி.
எப்போதும் கேட்கும் கேள்விக்கே அதிகமாக பதில் சொல்லாதவள் இன்று படு உற்சாகமாக பேசுவதை கேட்ட ஸ்வீனாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஜனனி... தன்சிகாவை இங்கு வந்து விட முடியுமா.. டிரஸ்ஸஸ் எல்லாம் இங்கதான் இருக்கு... என்றவளிடம் பங்ஷனுக்கு நான் ரெடி பண்ணி கூட்டிட்டு வந்து விடுகிறேன். அவளோட பேரன்ட்ஸ் எப்போ வருவாங்க என்றாள்.
அவங்க சரியா பங்ஷனுக்கு கொஞ்சம் முன்னாடி தான் வருக்காங்க. அதனால அதுக்கு முன்னாடி நீ இங்கே கொண்டு விட்டா நான் அவளை பங்ஷனுக்கு தயார் பண்ணி விடுவேன் என்று ஸ்வீனா சொல்ல அதெல்லாம் ஒன்றும் தேவை இல்லை.. நானே அவளை ரெடி பண்ணி வந்து கூட்டிட்டு வந்து விடறேன். அப்புறமா நீ அவங்க கிட்ட விட்டுட்டு என்று சொல்ல டிரஸ் கொடுத்த விடவா என்றாள் ஸ்வீனா.
வேண்டாம் ஸ்வீனா எனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரி டிரெஸ் எடுக்கனுமாம் அதனால்