யோசனையில் இருப்பதை கண்ட ஜனனி ஸ்வீனா என்ன ஆச்சு பயங்கர யோசனையா இருக்கே என்று கேட்க அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
அவள் கையை பிடித்து இழுக்க அப்போதுதான் சுய நினைவு வந்தவளாக ஜனனி என்றாள்.
என்ன யோசனை இவ்வளவு தீவிரமா யோசிச்சிட்டு இருக்க என்று கேட்க அவளோ ஒன்றும் இல்லை. தன்சிகா பத்திதான் என்றவள் அதற்கு மேல் எதுவும் சொல்ல மறுத்து விட ஜனனியும் அவளை வற்புறுத்தவில்லை.
சரி எனக்கு ஒரு விஷயம் சொல்லு. உங்கள் அண்ணன் அதாவது அவரோட ஃபேமிலி எப்ப பாரினிலிருந்து வராங்க என்று கேட்க அவளை வினோதமாக பார்த்தாள் ஸ்வீனா. அப்போ அண்ணியும் பாரின் போயிருக்காங்க என்று நினைத்து விட்டாளா... சரி இருக்கட்டும் என்று அமைதியாக இருந்து விட்டாள் ஸ்வீனா.
என்னுடைய என்கேஷ்மெண்ட் அன்றைக்கு தான் வருவாங்க ஜனனி என்றாள்.
அப்போ இன்னும் ஒன் வீக் இருக்கு இல்ல என்றாள் ஜனனி.
ஆமா அவர்கள் வர இன்னும் ஒன் வீக் ஆகும் என்றாள் சுரத்தில்லாமல் ஸ்வீனா.
அப்போ அது வரைக்கும் நானே தன்ஷிகாவை பார்த்துக்கொள்ளவா என்று தயக்கத்துடன் ஜனனி கேட்க ஸ்வீனா மனம் உள்ளே குத்தாட்டம் போட்டது. ஆனால் வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் உனக்கு ஏன் சிரமம் என்றாள்.
இதில் சிரமம் எல்லாம் இல்லை. உனக்கும் என்கேஷ்மெண்ட் ஒர்க் இருக்கு... நீயும் பிஸி அதனால நீயும் தன்சிகாவை பற்றி கவலைப்படாமல் உங்க என்கேஷ்மெண்ட் விஷயத்தை மட்டும் பாரு. நான் தன்சிகா நல்லபடியாக பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல ஸ்வீனாவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஸ்வீனா என்று தனக்கு தானே தட்டிக் கொடுத்து கொண்டாள்.
நெஜமாதான் சொல்றியா ஜனனி... உன்னால தன்சிகாவை பார்த்து கொள்ள முடியுமா என்று ஆர்வமாக அவள் கையை பிடித்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல கேட்க அதை பார்க்க சிரிப்பு தான் வந்தது ஜனனிக்கு. தன்சிகாவை பார்த்துக் கொள்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஸ்வீனா. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல அவளும் சரி என்று சொல்லி விட்டாள்.
அன்றைய பொழுது விடிந்தது...
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து ஜனனி அழைத்து செல்ல தன்ஷிகாவும் மிகவும் மகிழ்வுடன் அவளுடன் சென்றாள்.
சில நாட்களே பழகி இருந்தாலும் ஜனனி உடன் நன்கு ஒட்டிக் கொண்டாள் தன்சிகா. அதனால் இந்த ஒரு வாரம் முழுவதும் ஜனனி உடனே தான் நேரத்தை செலவிட போவதை