இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க தனாவுக்கு ஒரு போன் கால் வந்தது. அதை எடுத்து பேசியவன் டேய் மச்சான் என்னோட பாரின் ப்ராஜெக்ட் எல்லாம் விட போறேன். இனி என்னோட பிசினஸ் இந்தியாவில் மட்டுமே வச்சுக்கலாம் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதற்காக சில அகிரீமெண்ட்ஸ் முடிக்க வேண்டியது இருக்கு .நான் ஆபிஸ் போயிட்டு வரட்டுமா என்று கேட்க அவன் இந்தியாவிலேயே இருக்க போகிறேன் என்று சொன்ன வார்த்தையில் மகிந்து போனான். எத்தனையோ முறை அஸ்விட் சொல்லியிருக்கிறான் தான். ஆனால் அவன் கேட்டது இல்லை .இந்தமுறை தன்ஷிகாவுக்கு ஃபுட் பாய்சன் ஆகி அவள் ஹாஸ்பிடல் இருந்த நேரத்தில் அவனால் பார்க்க முடியவில்லை என்ற கவலை அவனுக்கு அரித்துக்கொண்டே இருந்தது. அதனால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறான். இதுவும் ஒருவகையில் நல்லதே என்று நினைத்தவன் சரிடா போய்ட்டு வா என்றான்.
அவன் அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்திற்குள் ஜனனி தன்சிகா உடன் அந்த இடத்திற்கு வந்தாள். பங்க்ஷன் ஆரம்பமாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு ஸ்வீ னாவிடம் வந்தவள் தான் ஊருக்கு செல்ல வேண்டியதையும் டைம் மாறி விட்டதையும் வருத்தத்தோடு தெரிவிக்க அவளும் சரி கொஞ்சம் நேரம் இருந்து விட்டு போ என்று சொல்ல அவளது வருத்தமும் அழிந்து போனது. என்னோட சூழ்நிலையை புரிந்து கொண்டதற்கு தேங்க்ஸ் என்று அவளைக் கட்டிக் கொண்டாள் ஜனனி.
பங்க்ஷன் ஆரம்பமாக இன்னும் தன்சிகாவை தேடி யாரும் வராததை கண்ட ஜனனி உன் அப்பா வந்துட்டாங்களா என்று கேட்க தன்சிகா எங்கேயும் இல்லையே என்றாள் .
நேரம் ஆவதை உணர்ந்த ஜனனி தன்ஷிகாவை அழைத்து சென்று அவளுக்கு இரவு உணவின் கொடுத்துவிட்டு குட்டிமா இனி உன்னோட அம்மாகிட்ட நான் சாப்பிட்டேன் பால் மட்டும் போதும் சொல்லி பால் குடிச்சிட்டு படுத்துக்க என்று சொல்ல அவள் சரி என்றாள்.
சாப்பாடு ஊட்டிவிட்டு பிறகு ஸ்வீனா விடம் கொண்டுவந்து விட்டுவிட்டு அவள் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
அரக்க பரக்க மண்டபத்தில் இருந்து வெளியே வந்தவள் அவசரத்தில் ரோடை கிராஸ் செய்ய முயல எதிரே வந்த காரை கவனிக்க தவறி விட்டாள். வேகமாக தன்னை நோக்கி வந்த காரை பார்த்ததும் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் நடுரோட்டில் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட ஒரு வலுவான கரம் அவனைப் பிடித்து இழுத்தது தன் நிலை மறந்து நின்றவள் தன்னை யாரோ பிடித்து இழுப்பது உணர்ந்து அவர்கள் மீது சாய்ந்து விட்டாள்.சாய்ந்தவள் தன்னையும் மறந்து அப்படியே நின்று விட்டாள்.
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her episode.