(Reading time: 11 - 22 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

அதற்குள் ராகவ்வின் அறைக்குள் சென்ற புஷ்பா அந்த குயிலி உன்னை தேடி வந்து இருக்கிறாளாம் வா என்று அழைக்க அவனுக்கோ எரிச்சலும் கோபமுமாக வந்தது.

 என்னை எவ்விதமாக ஏமாற்றியிருக்கிறாள். நான் அது கூட தெரியாமல் இவள் மீது எவ்வளவு அன்பை வைத்து விட்டேன் என்று தன்னையே நொந்து கொண்டு அவன் வெளியே வந்தான்.

 அவனது முகத்தைப் பார்த்த குயிலி அதிர்ந்தே விட்டாள். காலையில் புறப்படும்போது கூட எவ்வளவு தெளிவாக இருந்தான். இப்பொழுது அவனது முகம் எப்படி இருக்கிறது என்பதை கண்டவள் வேகமாக அவன் அருகில் சென்று ரொம்ப வலிக்குதா என்று அவன் கையை தொட போனாள்.

 அவளிடமிருந்து சற்று விலகி சென்றவன் நான் நல்லா தான் இருக்கிறேன் என்றான் சற்றுக் கரகரத்த குரலில்.

 அவனது நடவடிக்கையும் அவனது குரலில் தெரிந்த மாற்றமும் குயிலிக்கு சற்று பயத்தை கொடுத்தது. 

ஆனால் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.... ப்ளீஸ் என்று சொல்ல அவனோ நான் உன்னிடம் பேசுவதற்கு எதுவுமே இல்லை என்றான்.

 அவள் அதிர்ந்து போய் விட்டாள். ராகவ் நீ என்ன சொல்லுகிறாய் என்று கேட்க தன் அறைக்குள் சென்றவன் காலையில் தன் தாய் தன்னிடம் காட்டிய அனைத்து போட்டோக்களையும் எடுத்துக் கொண்டுவந்து அவள் முன்னே போட்டான்.

 நீ ஏன் என்னிடம் பொய் சொன்னாய் குயிலி. இது நீ ட்ராயிங் கற்றுக்கொண்ட சர்டிபிகேட். இது உன்னோட டான்ஸ் கிளாஸ் சர்டிபிகேட். இது உன்னுடைய கம்ப்யூட்டர் கிளாஸ் சர்டிபிகேட் என்று ஒவ்வொரு சர்டிபிகேட்டையும் புகைப்படத்தையும் அவள் முன்னாலே போட்டவன் நான் எங்கும் சென்றதில்லை, எதையும் படித்ததில்லை என்று என்னிடம் கூறினாயே என்று காட்டமாகவே கேட்டான்.

 அவள் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள். ஏனென்றால் அதில் இருக்கிற அனைத்து புகைப்படங்களிலும் அவள் இருந்தாலும் அதில் ஒன்றுமே உண்மையில்லையே என்று நினைத்தவள்.... நான் என்றைக்கு பள்ளிக்கூடம் போனேன்.. என்று யோசித்தவள் ராகவ் எனக்கு தெரிந்த வரை நான் எங்கும் சென்றதில்லை... நான் எந்த கிளாஸ்க்கும் சென்றதில்லை... நான் ட்ராயிங் வரைய கற்றுக்கொள்ளவும் இல்லை.. பாட கற்கவில்லை ஆடவும் கற்கவில்லை எனக்கு எதுவும் தெரியாது... என்னை நம்பு ராகவ் ப்ளீஸ் என்றாள் அவள்.

நீ சொல்வது உண்மை என்றால் என் அம்மா சொன்னது பொய் என்று சொல்கிறாயா... என் அம்மா என்னிடம் ஏன் பொய் செய்ய சொல்ல வேண்டும் என்றான் அவன்.

8 comments

  • steam Ivaru ena frnd-ooo...Sariya purinjikama andha chinna ponnai appadi hurt seithu anupitaru :angry: Pavam Poo!! She still hold some hopes on Raghav....Idhaivida inum perusa eppadi torture pana poringa madam ji :Q: Photo la irundha Karthik oda appa ammakkum inga irukura KD pushpa ammakkum difference strike agalaya :Q: facepalm Thatha oda clue yenavaga irukkum.....Kuyili &ippo irukara thatha oda journey successful aga irukkuma? Ivangalodu karthik join panuvara??? Interesting update :clap: :clap: Curious to see what happens next. thank you.
  • அன்புள்ள ஜெபா! தங்களிடம் கற்பனை, படைக்கும் திறன், எல்லாமே செழுமை! அவைகள் தங்களை இன்னும் உயரே உயரே பறக்கவைக்கும் என்பது உறுதி! வாழ்த்துக்கள்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.