Page 6 of 6
அர்த்தமென்ன.... அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை... தாத்தா எதையோ சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால் அப்பொழுது அவர் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியாது என்று நினைத்து இதை ஒரு பேப்பரில் எழுதி இருக்கிறார்.
அதனால் இந்த ஒற்றை வரி பின்னால் ஏதோ பெரிய விஷயம் இருக்கிறது. இதை நிச்சயம் நான் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நான் தாத்தாவுடன் வாழ்ந்த அந்த வீட்டிற்கு சென்றே ஆகவேண்டும்.
நாளை முதலாவது போய் ராகவ்வை சந்திக்க வேண்டும். அதன் பிறகு இங்கிருந்து ஆசிர்வாதம் தாத்தாவுடன் சேர்ந்து பழைய கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தவளாய் உறங்க சென்றாள்.
தொடரும்