கிளம்பி நேராக தன் அறைக்கு வந்தவள் அவர் கொடுத்த பேப்பரையும் அந்த பழைய செய்தித்தாளையும் எடுத்து பார்த்தாள்.
செய்தித்தாளை பார்த்தவள் அதிலிருந்த புகைப்படத்தை கண்டு அதிர்ந்து போய் விட்டாள். அதில் அவளது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இடம்பெற்றிருந்தனர். ராகவ்வும் இடம்பெற்றிருந்தான்.
ராகவ் அருகினில் இருவர் நின்றார்கள். அது நிச்சயம் அவனது தாய் தந்தையாக தான் இருக்கவேண்டும் என்று குயிலி நினைத்துக்கொண்டாள். அதேபோல மறுபக்கம் குயிலி தன் பெற்றோர்களுடன் நின்று கொண்டிருந்தாள்.
குயிலியின் பெற்றாருக்கு நடந்த பரிசளிப்பு விழாவில் எடுத்த புகைப்படம் தான் அது என்று அறிந்து கொண்டாள். நடுவிலே மூன்று அரசியல் தலைவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அதற்கு கீழே எழுதப்பட்ட செய்தியை வாசித்தாள். அவளது தாய் தந்தையர் கண்டுபிடித்த அறிவியல் வளர்ச்சியின் ஒரு முயற்சிக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படம் தான் அது என்பதை உறுதி செய்து கொண்டாள்.
அந்த பேப்பர்களை எடுத்து கொண்டு போய் நான் நிச்சயம் ராகவ்விடம் காட்ட வேண்டும். அப்போது என்னை புரிந்து கொள்வான். நிச்சயம் எனக்கு ஒரு பதில் கிடைக்கும் என்று நினைத்தவள் காலையிலேயே ராகவ்வை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
காலையில் அவனை சந்திப்பதால் இன்னும் தன் வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பை சந்திக்க போகிறாள் என்பதை அவள் அறியவில்லை.
ராகவ் அவளை முழுமையாக வெறுத்து விட்டான் என்பதை உணர வரும்பொழுது குயிலியால் அதை தாங்கிக்கொள்ள முடியுமா என்றுதான் தெரியவில்லை.ராகவ்வின் வெறுப்பை அவள் உணர்ந்துகொள்ள நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. விடிய போகும் அந்த நாள் அவளுடைய வாழ்க்கையில் ராகவ்விருக்கும் அவளுக்குமான அன்பிற்கான அஸ்தமனம் என்று அவள் அந்த இரவில் உணரவில்லை .
அந்தப் பழைய செய்தித்தாளை எடுத்து ஒரு கவரில் பத்திரப்படுத்தி வைத்தவள் தன் கையிலிருந்த மற்றொரு பேப்பரை விரித்து பார்த்தாள்.
அது சில வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பேப்பர் என்று அந்தப் பேப்பரை பார்க்கும்போதே நன்றாக தெரிந்தது. ஏனெனில் வெள்ளை நிறத்தில் இருந்த அந்த பேப்பர் பழுப்பு நிறத்திற்கு மாறி இருந்தது.
உள்ளே அப்படி என்ன தகவல் தான் இருக்கும் என்று பிரித்து பார்த்தவளுக்கு அந்தப் பெரிய வெள்ளைப் பேப்பரில் ஒரே ஒரு வரிகள் மட்டுமே இருந்தது. "ஒற்றையாய் நிற்பதே உன் வழி".
மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தாள். ஒற்றையாய் நிற்பதே உன் வழி என்றால் இதன்