தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 22 - சாகம்பரி குமார்
"ரெண்டு விஷயத்தை கணக்கில் அடக்க முடியாது. ஒன்று இந்த யுனிவர்ஸ்.. மற்றொன்று மனிதர்கள் செய்கின்ற முட்டாள்தனங்கள்.." ரஞ்சன் கோபமாக சொல்ல,
"இந்த பிரபஞ்சத்தைகூட அளவிட்டு விடலாம். ஆனால்… அப்படினு ஐன்ஸ்டைன் சொல்லி இருக்கார். இப்ப நீ எதுக்கு அதை சொல்ற?" நந்தினி கேட்டாள்.
"எல்லாம உன் அண்ணன் செய்ற வேலைதான்… ஒரே முட்டாள்தனத்தை திரும்ப திரும்ப செஞ்சிட்டு இருக்கான்"
"ரிபீடட்… ம்… ரேச்சல்கிட்ட சண்டை போட்டாரா?"
"சூப்பர்மா… இப்படி நச்சுனு சொல்லிட்ட"
"எங்கண்ணன் ரொம்ப பிரில்லியண்ட்.. ஸ்டுப்பிடா நடந்துக்கறதுனால் ரேச்சல் விஷயத்தில்தான்… அதுசரி இப்ப என்ன செஞ்சார்?"
"ரேச்சலை ரொம்ப பேசிட்டான்…" என்றவன் நடந்ததை விளக்கினான்.
"ம்… அவள் பதிலுக்கு திட்டிட்டு போயிட்டாளா?"
"ஆமாம்… ஒதுங்கி இருக்கறதுன்னு முடிவு செஞ்ச பிறகு எதுக்கு அவளை வம்படிக்கனும்.. இதுல… என்னை தேடிட்டு வந்திட்டியானு கேள்வி வேற"
"யார் யாரை தேடினாங்கனு இப்ப புரியுது.."
"என்ன சொல்ற.."
"அவரே ஸ்டேட்மென்ட் தந்திருக்கார். கனவுல தொல்லை பண்றது பத்தாதுனு நேரில் வந்து மூஞ்சியை காட்டறீயானு… நோட் திஸ் பாயின்ட்… அண்ணன்தான் கனவு கண்டுகிட்டு இருக்கார்… உறவுகள் தொடர்கதைபா"
"இது விடுகதை…"
"விடாத கதை. நான் நினைக்கறதுபோலதான் நடக்க போகுது. சம்திங் இரண்டு பேருக்கும் இடையே லிங்க் இருக்குப்பா… கனவு… நினைவுன்னு லிங்க் வருது."
"ஒருவேளை அப்படி ஒரு சம்பவம் நடந்தாலும் இவன் செய்ற குளறுபடிக்கு ரேச்சல் அவனை காய்ச்சி எடுக்கற கிளைமாக்ஸ்தான் நடக்கும். அமைதியாக ஒதுங்கி இருந்தாலே போதும். அவளை பார்த்தாலே தாவி குதித்து சண்டை பிடிக்கறான். அப்புறம் மன்னிப்பு கேட்கறது. வேற வேலையே இல்லையா.?'
"என்னப்பா… இதுகூட தெரியாமல் இருக்கீங்க. சத்யாண்ணன் எங்க வீட்டு செல்ல பிள்ளை. அவருக்கு வேணுங்கறது உடனடியாக நிறைவேறிடும். அவரும் அந்த அன்பை கிராண்டட் ஃபார் எனிதிங்னு எடுத்துகிட்டது இல்லை… படிப்பு… விளையாட்டுனு மட்டும் இல்லை.. பிஸினஸ்லயும் ஜெயிச்சவர். ஆனால் அவர் வாழ்க்கை தோற்று போயிடுச்சு…"