வந்துவிடும். அப்பொழுது அவளுடைய கணவனிடம் அவளை சேர்த்துவிடலாம் என்று திட்டமிட்டான்.
இடையே அவளுடைய கணவன் முகவரி கிடைத்தாலும் நல்லதுதான். அந்த மீராவின் 'சத்யனி'டம் இவளை சேர்த்து வைத்து நிம்மதி ஆகலாம்..
"சரி.ஜெமி. நான் சொன்னதை கொஞ்சம் கன்சிடர் பண்ணு." என்று அவள் நகர்ந்தாள்.
"நாம் நாளைக்கு ஹாஸ்பிடல் போகணும். ஆன்ட்டி சொல்ல சொன்னாங்க." ஜெமி சொன்னதற்கு தலையாட்டி விட்டு சைக்கிளில் வெளியே கிளம்பினாள்..
'நல்லவேளை ரேச்சல் இப்போதே உண்மையை சொல்லி விட்டாள். கொஞ்சம் முயற்சித்தால் சத்யனிடம் இருந்து அவளை விலக்க முடியும்… அவனே அந்த வேலையைதான் செய்து கொண்டு இருக்கிறான்… விரைவாக மீராவின் முகவரியை கண்டு பிடிக்க வேண்டும். இன்றைக்கு அந்த போலிஸ் ஸ்டேஷனில் அதை வாங்கி விடலாம்.' திட்டமிட்டவன் பல்ஸரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
கல்பி ரொம்பவும் மனம் நொந்து போயிருந்தாள். அவளுடைய பிரச்சினைக்கு ரேச்சலிடம் தீர்வு கிடைக்கலாம் என்று நினைத்தாள். அவளை தேடி எம்80யில் விரைந்தாள். எதிரில் ரேச்சல் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தாள்.
"ரேச்சல்… ரேச்சல்…" வண்டியை ஸ்லோ செய்து கல்பி கத்தினாள். ரேச்சல் சைக்கிளை நிறுத்தினாள்.
"என்ன கல்பி"
"உங்கிட்ட கொஞ்சம் பேசணும்பா. முக்கியமான விஷயம்."
"ம்… சரி வா" அருகிலிருந்த மரத்தடியில் சைக்கிளை நிறுத்தினாள்.
"என்ன விஷயம்பா.."
"என்னோட மாமன் மாரப்பன் பத்திதான்…"
"என்னவாம்"
"அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்றான்."
"உனக்கு அவனை பிடிக்குமா?"
"பரவாயில்லாமல் பிடிக்கும்"
"அப்ப கல்யாணம் பண்ணிக்க"
"ப்ச்… அவன் குடிகாரன் ரேச்சல். குடிச்சிட்டா தன்னையே மறந்திடுவான். அன்னிக்கு தலைவர் தாத்தா கிட்டகூட சண்டை போட்டானே…"
"அப்ப வேண்டாம்னு சொல்லிடு.."
"சொன்னேன்… அவனால் குடியை விட முடியாதாம். கல்யாணம் செய்துட்டு அவனை