சொல்வது மிகப்பெரிய தவறு. அது நம்பிக்கை துரோகம். பிடித்தவர்களிடம் பொய் சொல்லுவதும் நம்பிக்கை துரோகம் செய்வதும் ஒன்றுதான். இரண்டிற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. என்னைப் பொருத்தவரை அவள் நம்பிக்கை துரோகி. அவளை தண்டிக்காமல் விட்டு விட்டேனே என்று சந்தோஷப்பட வேண்டும்.
சரி ...அவளை விடு... ஏன் ராமுவையும் என்று தொடங்கியவர் முடிக்காமலேயே ராகவ் முகத்தை ஏறிட்டு பார்த்தார்.
நீங்கள் என்ன கேட்க நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. என்னை சிறுவயதிலிருந்தே வளர்த்தவர் அவர் தான். என்னை பார்த்துக் கொள்வதும் அவர்தான். சிறுவயதில் இதை செய் இதை செய்யாதே என்று அடிக்கடி கூறுவார். அப்போதெல்லாம் அவர் மேல் எனக்கு கோபம் வரும். நான் எப்படி வளர வேண்டும் என்று எனக்கு சொல்லித் தர அப்பா இருக்கிறார். அப்பா தான் என்றும் எற் ரோல்மாடல் என்று சொல்லி புறக்கணித்து இருக்கிறேன். ஆனால் வளர்ந்த பிறகு அவரிடம் அன்பாக நடந்து கொண்டேன். சிறு வயதில் அவரை காயப் படுத்தியதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன்.ஆனால் அவரோ.... என்றவன் சற்று நிறுத்தி விட்டு நான் குயிலியிடம் பேசுவது பற்றியும் முதலில் குயிலியை சந்தித்தது பற்றியும் அவரிடம் சொல்லி இருக்கிறேன். ஆனால் அவர் அதை தவறு என்றும் சொல்லவில்லை... அம்மாவிடம் சொல் என்றும் சொல்லாமல் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்... அவளைப் போன்ற ஏழைகளிடம் பேசினால் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்காது என்று அம்மாவிடம் மறைக்க சொல்லியதே அவர்தான். அடிக்கடி குயிலி பற்றி விசாரித்ததோடு அவள் நல்லவளா தான் இருப்பாள் என்று நம்பிக்கையாக கூறுவார். நான் இந்த அளவு முட்டாளாக இருந்து இருக்கிறேன் என்றால் அதற்கு ஒரு வகையில் அவரும் காரணம் தான்... குயிலியின் வலையில் நான் சிக்குவதற்கு ஏதோ ஒரு வகையில் அவரும் காரணமாகி விட்டார். இந்த கோபத்தில்தான் அவரை விட்டு ஒதுங்கி இருக்க நினைக்கும் போது அவரே என்னை தேடி வந்து அவள் நல்லவள் யோசித்துப்பார் என்கிறார். அதனால்தான் நான் கோபத்தில் அவரை வெளியே தள்ளிவிட்டேன். குயிலியின் திட்டத்தில் அவரும் ஒருவரோ என்று நினைத்து ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டேன். சிறிது நேரம் கழித்து தான் உங்களிடம் ஒரு வார்த்தை கேட்டு இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதற்குள் அம்மாவே அவரைத்தேடி ஆட்களை அனுப்பி விட்டார்கள். ஆனால் அவரை காணவில்லை என்று அவர்கள் திரும்பி வந்து விட்டார்கள். எனக்கும் உங்களிடம் கேட்காமல் முடிவு எடுத்து விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. அவர் காணாமல் போனதும் மிகவும் வருத்தமாக இருக்கிறது. சாரி அப்பா... என்னை மன்னித்து விடுங்கள். இனி எந்த முடிவு என்றாலும் உங்களிடம் கேட்டுவிட்டு தான் எடுப்பேன் என்றான் ராகவ்.