கண்களும் மனதின் வலியை போக்கும் வலி நிவாரணியை வெளியிட மறந்து திகைத்து நிலைகுத்தி நின்றது.
அதிகாலை நேர தென்றல் தேகம் தீண்ட அந்த தீண்டல் ஜனனிக்கு நெருப்பாய் தெரிந்தது.
தற்போதைய நிலையைப் புரிந்துகொண்ட சந்தியா நீ... நீ நீ ரவுடி ஜனனி இல்லை. ஹீரோ ஜனனி. ஏனென்றால் உனக்கு உன்னோட சந்தோஷத்தை விட மற்றவரின் சந்தோஷம் தான் பெரிதாக இருந்தது. அதனால் தான் இப்படி நடந்து கொண்டாய். உன்னை போல தைரியமான ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை என்றாள் சந்தியா.
ஜனனி பதிலேதும் பேசாமல் வானத்தை வெறித்துப் பார்த்தாள். அவள் மனதினை அழுத்தும் பாரங்கள் வார்த்தைகளாக வெளியே வந்தால் அவள் மனச்சுமை குறையும் என்று எண்ணிய சந்தியா பொறுமையாக அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
ஆனால் ஜனனி மனதின் பாரத்தை இறக்கி வைக்க விரும்பாமல் பேச்சை மாற்றினாள். முன்பெல்லாம் இந்த நட்சத்திரங்களை பார்க்கும்போது இவைகள் எண்ணில் அடங்காமல் பேசுவது போல இருக்கும்.
இப்பொழுது கூட அவைகள் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன. நாம்தாம் அதை கவனிக்காமல் சுயநலமாய் மாறிப் போய் விட்டோம்.
நாம் மாறிப் போய்விட்டோம் என்பதும் உண்மைதான். அதே அளவில் அவைகளும் மாறிப் போய் விட்டது என்பதும் உண்மை.
எதை வைத்து அப்படி சொல்கிறாய்.
முன்பெல்லாம் இரவு நேரத்தில் வெட்டவெளியில் நின்று கொண்டு வானத்தை பார்த்தால் அவைகள் எண்ணில்லா கதைகள் பேசும். நம் மனதுக்கு பிடித்தவர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களது முகத்தை காட்டும் கண்ணாடிபோல தன் பளிச்சென்று வெளிச்சத்தில் காட்டி இன்பச்சாரலை மனதிற்குள் அனுப்பும். ஆனால் இப்போது இவைகள் கூட மாறிப் போய்விட்டன. இவைகள் கூட செல்போன் பயன்படுத்துகின்றன போல. இப்போதெல்லாம் இவைகளை எட்டிப்பார்த்தால் இன்பச்சாரலை அனுப்புவதற்கு பதிலாக இயந்திரங்களின் தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப கதிர்களை அனுப்புகிறது. வாழ்க்கையின் ஓட்டத்தில் இப்பூவுலகம் மட்டும் அல்ல வானுலகமும் மாறி விட்டது என்று தன் மனதில் காயத்தை வெளிப்படுத்தினாள் ஜனனி.
அப்படி இல்லை ஜனனி... நமக்கு நெருக்கமான சில பேரை தொலைக்கும் பொழுதோ அல்லது சிலவற்றை வெறுக்கும் பொழுதோ அதோடு தொடர்புடைய இந்த நிலவையும் நட்சத்திரங்களையும் வெறுத்து விடுகிறோம். ஏனென்றால் இவைகளை இரசிக்கும்