அப்படி என்றால் பச்சோந்தி போலவா.... அப்படி என்றால் இவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று குழந்தைத்தனமாக கேட்டது அந்தக் குட்டி டுவிங்கிள்.
இல்லை இல்லை... நான் அப்படி சொல்லவில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையில் முன்னேறுகிறவர்கள்... தைரியமானவர்கள்... இப்படி பலவாறு அவர்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. அதே போல எல்லோரும் கெட்டவர்களும் இல்லை என்று முடித்தது அந்த பெரிய ட்விங்கிள்.
இப்பொழுது எனக்கு புரிகிறது... நான் இப்போதுதான் ஒரு கவிதை படித்தேன். அது இந்த மனிதர்களுக்குப் பொருந்தும் என்று நினைக்கிறேன். நான் சொல்லுகிறேன் நீங்கள் கேட்கிறீர்களா என்றது குட்டி டுவிங்கிள்.
ஓகே டுவிங்கிள் சொல்லு பார்க்கலாம் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தது மற்ற இரண்டு டுவிங்கிள்...
தன் கையிலிருந்த டேப்பில் சில்சீ வெப்சைட் ஓபன் செய்து கவிதையை வாசிக்க தொடங்கியது.
வாழ்க்கை என்னும் நாடக மேடையில்
ஏற்று இருக்கும் கதாபாத்திரங்கள் பல பல...
தோழியாய் தாயாய் மகளாய்
சகோதரியாய் ஆசிரியையாய்
உறவுக்காரியாய் வீட்டுக்காரியாய் இன்னும் பல..
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப
செதுக்கப்பட்ட குணங்களோடு
அமைக்கப்பட்ட வடிவங்களோடு
பொருத்தப்பட்ட பல முகங்களுக்கு நடுவே
மறந்துவிடுகிறோம் நம் நிஜமுகத்தை..
நினைவுகளில் மீண்டும் நிறுத்த
மறந்துபோன முகத்தை
தேடித்தேடி தொலைகிறோம் ஒவ்வொரு நாளும்...
கண்டு பிடிப்போமா எனத் தெரியாமலேயே... என்று வாசித்து முடித்தது.
ஏய் குட்டி ட்விங்கிள்... கவிதை ரொம்ப சூப்பர் தான். ஆனால் இதை எழுதியது ஏதாவது ஒரு மனிதனாக தான் இருக்க வேண்டும்.