ஜனனி... ஒருவேளை அவர்கள் மோசமானவர்களாக இருப்பார்களோ. தவறான தொழில் எதுவும் செய்கிறார்களோ... அதனால் தான் குழந்தையை விட்டு விட்டு அடிக்கடி வெளியே சென்று விடுகிறார்கள்...
சந்தியா... நீ ஏன் இப்படி நினைக்கிறாய். தனு என்கிட்ட பேசும்போது அவளுடைய அம்மா அவனை மிகவும் நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என்று கூறியிருக்கிறாள். ஸ்வீனாவும் மிகவும் நல்லவள். ஒரு வருடமாக பிசினஸ் டல்லா போகுது. அதை சரிசெய்ய தான் அவர்கள் அலைகிறார்கள் என்று நினைக்கிறேன்.
டல்லா போகிறது என்று உனக்கு எப்படி தெரியும்.
எனக்கு கம்பெனியின் அனைத்தும் நன்றாக தெரியும். ஸ்வீனா இல்லை என்றால் கூட என்னால் மேனேஜ் செய்ய முடியும். அந்த அளவிற்கு எனக்கு தெரியும்.
உங்கள் கம்பெனி யாருடைய பெயரில் இருக்கிறது இருக்கிறது.
தனவந்தன் என்ற பெயரில் இருக்கிறது. தனவந்தன் என்பது ஸ்வீனாவின் அண்ணனாக இருக்கலாம்.
ஓ... லாபம் நக்ஷ்டம் எல்லாம் உனக்கு அத்துப்படி...
இல்லை சந்தியா... ப்ராஜெக்ட் வேலைகளை மட்டும் எல்லாம் தெரியும். லாபம் நஷ்டம் எல்லாம் எனக்கு ஓரளவு தெரியும். ஏனென்றால் ஒவ்வொரு பிராஜக்ட் கொடுக்கும் போதும் லாபம் பற்றி ஸ்வீனா என்னிடம் சொல்வாள். ஆனால் வேறு யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள் என்று சொல்வாள்.
சரி ஜனனி.... நீ இந்த கம்பெனியில் சேர்ந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை அல்லவா...
ஆமா சந்தியா ஏன் கேட்கிறாய்.
ஒரு வருடம் கூட ஆகவில்லை... ஆனால் அதற்குள் கம்பெனி மொத்த தகவல்களும் தெரியும் என்று சொல்கிறாய்... ஆனால் நீ கேட்ட தகவல்கள் எதையும் நீ கண்ணால் பார்க்கவில்லை. அதாவது வரவு செலவு பிராஜக்ட் விவரங்கள் இவை எல்லாமே காதால் கேட்டிருக்கிறாய். அப்படித்தானே...
ஆமா சந்தியா... எனக்கு எல்லாம் ஸ்வீனா சொல்லி தான் தெரியும்.
உனக்கு இன்னும் சந்தேகம் வரவில்லையா...
சந்தேகமா... ஏன்.
கண்மூடித்தனமாக அவளை நம்புகிறாய்... ஏதோ திட்டம் தீட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன்.. யாரையும் நம்ப முடியாது... அதனால் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
சந்தியா... போதும் நிறுத்து என்றவள் கோபத்துடன் சொன்னாலும் அவள் மனது யோசிக்க