மூச்சு விடாமல் பேசிவிட்டு மான்குட்டிபோல உள்ளே ஓடியவளை பார்க்கவும் ஷீலாவிற்கு கண்கள் கலங்கின.
"நீ யாரடி… என் செல்லமே… என்னை அன்பு மழையில் நனைக்கிறாய். நீ இல்லாத ஒரு நாளை என்னால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை." என று புலம்பினார்.
ரேச்சல் அவளிடம் தந்த அன்பின் மதிப்பை ஷீலாவால் மட்டுமே உணர முடியும். மிக நீண்ட நாட்களாக மழையின்றி பாலைவனம்போல மாறிய இடத்தில் திடீரென்று பெய்யும் மழை எவ்வளவு அற்புதமானது!.… அந்த தூய்மையான வான்மழை குளிர வைக்கும்...தாகம் தீர்க்கும்… காய்ந்து போன மரங்களை துளிர்க்க வைக்கும்… சில அழகான மின்னல்கள் தோன்றி வானவேடிக்கை காட்டும்… மாலை நேரத்து மழை எனில் வானவில்லை கொண்டு வர்ண ஜாலம் காட்டும்…
அத்தனையையும் ரேச்சலினால் ஷீலா மகிழ்ச்சியாக அனுபவித்தார். கடைசியில் பெரிய இடியும் தலையில் இறங்கி விட்டது. ஆம்… அது ரேச்சல் இல்லை மீரா என்பதை ஜெமி சொன்னபோது அவருக்கு அப்படித்தான் இருந்தது… அத்துடன் அவருடைய ரேச்சல் இறந்த விஷயமும் துக்கமுற வைத்தது. அழுகையின் ஊடே மேத்யூஸிடம் மானசீகமாக பேசினார். ரேச்சல் இறந்து விட்டாள் என்பது தெரியவும்தான் என்னை தனியே விட்டு சென்று விட்டீர்களா என்று அழுதார்.
இப்போதைய ரேச்சல் அவள் அருமை நண்பன் ஃபெலிக்ஸின் மகள் மீரா… அவருக்கும் மகள் முறைதான் வேண்டும்… ஆனால் திருமணம் ஆன அவளை உரிமை கொண்டாட முடியாதே…
அப்போது காபியுடன் வந்த ரேச்சல் ஷீலாவின் அருகில் அமர்ந்தாள்.
"என் செல்ல டார்லிங். ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க… " என்று கொஞ்சினாள்.
அவருக்கு உள்ளுக்குள் ஏக்கம் பரவியது. இந்த பார்வை… பேச்சு… ஸ்பரிசம் அத்தனையையும் இழக்கப் போகிறார். அதிலும் ரேச்சல் மீராவாகும்போது ஷீலாவின் நினைவு இருக்காதே… அவரை யாரோவென பார்ப்பாளே… அதை தாங்க முடியுமா? விழி ஓரத்தில் நீர் துளிர்த்தது.
"அச்சோ… ஏன் அழறீங்க… நான் இருக்கும்போது மிஸ்டர்.மேத்யூஸை நினைத்து அழக்கூடாது… எனக்கும் அழ வரும்ல "
ரேச்சல் அவளாக கற்பனை செய்து கொண்ட காரணத்தை சொல்லி ஷீலாவை சமாதானப்படுத்தினாள்.
"அதெல்லாம் இல்லை. இப்ப ஓகேயாயிட்டேன்" என்று சொல்லிய ஷீலா…
"அப்புறம் இன்னிக்கு நாள் எப்படி போச்சு?" என்று பேச ஆரம்பித்தார்.
என்னவென்று சொல்வது… இருவருக்குமே சரியில்லாத நாள்தான்…ஷீலாவிற்கு மீராவை