தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 20 - ஜெய்
ஏகப்பட்ட மன வருத்தங்களுடன் மைத்தியின் லண்டன் பயணம் துவங்கியது.... அவள் டெல்லி சென்று இறங்கிய அன்று ரகுவிற்கு முக்கிய மீட்டிங் இருந்ததால் அவனாலும் அவளை வந்து பார்த்து ஆறுதல் சொல்லி தேற்ற முடியவில்லை... இருந்தும் தொலைபேசியில் பேசும்பொழுது அவனால் முடிந்தவரை அவளை உற்சாகப்படுத்தினான்.... அவனுக்கும் அலுவலகம் கிளம்பும் அவசரம்... அதனால் நிறைய நேரம் பேச முடியா நிலை....
எத்தனை பேர் சுத்தி இருந்து நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னாலும் , நமக்கு மிகவும் நெருங்கிய உறவுக்கு உடல் நிலை சரியில்லை எனும்போது எந்த வார்த்தையால் நம்மை சமாதானப் படுத்த முடியும்... அதுவும் அந்த உறவு பெற்றோர் எனும்போது இன்னுமே மனம் அதிக கவலை கொள்ளுமே தவிர சமாதானமடையாது.... இங்கும் மைத்திக்கு அதே நிலை... தன் தந்தையின் உடல் நிலை.... ரகுவுடன் நேரில் சந்தித்து பேசாதது எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட மன அழுத்தத்துடன் மைத்தியின் பயணம் டெல்லியிலிருந்து லண்டன் நோக்கி தொடர்ந்தது....
அவர்கள் லண்டன் சென்று இறங்கிய பின்னும் உற்சாகமின்றியே காணப்பட்டாள் மைத்தி.... துளசியும் தன்னால் முடிந்தவரை அவளுக்கு தைரியமூட்டினாள்.... அந்த நிமிடம் சரியாகுபவள் அடுத்த ஐந்தாம் நிமிடம் தன் தந்தையின் நிலையை யோசிக்க ஆரம்பித்து விடுவாள்...
இப்படியாக மைத்தியின் மனம் தந்தை, கிரிக்கெட் என்று ஊசலாடிய நிலையிலேயே இருந்தது... இவர்கள் சென்றது புதனன்று மாலை... வெள்ளியிலிருந்து இரு நாட்டுக்கும் இடையிலான ஆட்டம் ஆரம்பிக்கிறது.... ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு ஐந்து நாள் போட்டியிலும் இரு அணிகளும் மோத உள்ளன... வெள்ளியன்று முதல் ஒரு நாள் போட்டி ஆரம்பமாக உள்ள நிலையில் வியாழன் காலை முதல் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தனர் இரு அணி வீராங்கனைகளும்...
மைத்தி ஒரு இடத்தில் பந்து வீசும் பயிற்சியில் இருக்க, துளசி வேறு ஒரு இடத்தில் மட்டையடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள்... அன்றுதான் மைத்தியின் தந்தைக்கு அறுவைசிகிச்சை செய்யவிருக்கும் மருத்துவர்கள் வந்து பார்க்கும் நாள்.... இங்கிலாந்தில் இரவென்றால் இங்கு அடுத்த நாள் பகல்.... மைத்தி கிளம்பி மூன்று நாட்கள் கழிந்த நிலையில் அன்றுதான் மருத்துவர்களின் நேரம் கிடைத்தது... மைத்திக்கு மனமெல்லாம் திக் திக் உணர்வுடனே பந்து வீசும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள்... எந்த விதமான சுழலும் இல்லாமல் அவளின் பந்து வீச்சு மிக சாதாரணமாகவே இருந்தது... பயிற்சியாளர் இரண்டு மூன்று முறை அவளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.... அதன் பின் சற்று கவனம் எடுத்து பயிற்சி எடுக்க