கூட்டிலிருந்து வெளியில் தனியாக வந்திருக்கிறாள்.... அதுவும் தனக்கு மிக முக்கியமானவர் ஆபத்திலிருக்கும்போது.... அவளால் பக்குவமாக எதையும் யோசிக்க முடியவில்லை... பயிற்சியாளர் கேட்ட கேள்விக்கும் அவளால் விடையளிக்க முடியவில்லை...
அடுத்து கோச் என்ன சொல்லப்போகிறாரோ இந்த அக்கா ஏன் இப்படி ஒரு பதிலும் கூறாமல் நிற்கிறாள் என்று அச்சத்துடன் இருவரையும் மாறி மாறி பார்த்தாள் துளசி...
பயிற்சியாளரின் கேள்விக்கு மைத்தியால் ஒழுங்கான பதில் கூற முடியவில்லை... தான் சரியாக பந்து வீசியதாகவே கூறினாள்... அவளை பொறுத்தவரை பன்னிரண்டு ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை எடுத்தது சிறந்ததே.... ஏன் குறை கூறுகிறார்கள் என்றே புரியவில்லை...
அனைவரும் கடைசி ஓவரே தோல்விக்கு காரணம், அதுவும் மைத்தி பொறுப்பில்லாமல் பந்து வீசியதே காரணம் என்று கூற இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதுபோல் பார்த்தாள் மைத்தி....
ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருமே மைத்தியை குறை கூற, பதில் சொல்ல முடியா நிலையில் இருந்தாள் மைத்தி...
“கோச் எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு புரியலை... நான் நல்லாத்தான் பால் போட்டேன்... எங்கயும் மிஸ் பண்ணி நிறைய ரன் கொடுத்தா மாதிரி நியாபகம் இல்லை...”, மைத்தி கூற அனைவரும் தவறும் செய்துவிட்டு அதை நியாயப்படுத்தவேறு செய்கிறாளே என்று அவளை கோவத்துடன் பார்த்தனர்...
இவர்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பேச நடுவில் ஒரு பெண் எழுந்து பயிற்சியாளரிடம் இறுதியாக ஆட வந்த வீராங்கனை மைத்தியின் அருகில் சென்று பேசினாள் என்றும் அதன் பிறகே மைத்தி பந்து வீசும் முறை மாறியது என்றும் கூற அனைவரும் அதிர்ந்து மைத்தியை பார்த்தார்கள்...
கிரிக்கெட்டில் சூது என்பது காலம் காலமாக இருப்பது... அதில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதித்த போதும் அது தொடர்ந்த படியே உள்ளது.... இங்கும் அனைவரும் மைத்தியும் அப்படி ஏதேனும் விஷயத்தில் ஈடுபட்டுள்ளாளா என்று அவளை பார்த்தனர்....
மைத்தியின் மீது வைத்த குற்ற சாட்டிலிருந்து அவள் மீண்டு வருவாளா... அவளின் பதில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா... இல்லை இந்த போட்டியில் செய்த பிழைக்காக அடுத்தடுத்த போட்டியிலிருந்து விலக்கப்படுவாளா பார்க்கலாம்....
தொடரும்
Next episode will be published on 11th Nov. This series is updated weekly on Wednesday mornings.