தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 24 - சாகம்பரி குமார்
மறுநாள் காலை… அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டு இருந்த சத்யனுக்கு மனதில் மீராவின் நினைவு பாரமாக இருந்தது. ஆனால் அதைவிட நேற்று ரஞ்சன் செய்த டபுள்கேம்தான் கனபாரமாக இருந்தது.
ஏற்கனவே சத்யனை வள்ளியூர் செல்லவிடாமல் தடுத்தது அவன்தான். இப்போது அவனை ரேச்சலிடம் மன்னிப்பு கேட்க விடாமல் தடுத்ததும் அவன்தான். அவன் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? அவன் எதை மறைக்கின்றான்?. கேள்விக்கு பதில் தேடி நேராக ரஞ்சனிடம் சென்றான்.
"சத்யன் இப்போது பரவாயில்லையா?"
"நாட் ஸோ பேட். ஆனால் எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியலை. நான் ரேச்சலிடம் மன்னிப்பு கேட்டபோது அந்த விஷயம் சரியாகதவாறு செய்தாய். எனக்கு எதிரான ஸ்டாண்ட் எடுத்திருக்கிறாய் என்பது புரியுது. ரேச்சலோட டோனர் மீராங்கறது மட்டும் அதற்கு காரணமில்லை… வேறு எதையோ மறைக்கிறாயா?"
சத்யன் கேட்கவும் ரஞ்சன் திகைத்து நின்றான். இதற்கு என்ன பதில் சொல்வது?. அவன் மனதில் இருப்பதை மறைக்க முடியுமா?.
"அது…"
"யூ நோ மீ!. நான் மீராவை மறந்துட்டு ரேச்சல் பின்னாடியே ஓட மாட்டேன்னு உனக்கு நல்லா தெரியும். ஆனாலும் ஏன் அப்படி செய்தாய்? ஸ்பீக் அவுட்…" அவன் கடுமையாக பேசவும் ரஞ்சன் வாயை திறந்து பேச ஆரம்பித்தான்.
"நீ மீராவின் ரிப்போர்ட்டை பார்த்தபோது நான் ரேச்சலுடைய ரிப்போர்ட்டை பார்த்தேன். அதில் ஒரு அதிர்ச்சியான விஷயம் இருந்தது. அவள் திருமணமானவள் சத்யன். அவளுக்கு குழந்தையும் இருக்கிறது. "
"என்ன!"
"அவளுக்கு சயநினைவு இல்லாததால் அவளை விட்டு சென்று விட்டார்கள் போல. ஷீலா மேடம் இதுபற்றியும் நம்மிடம் சொல்லவில்லை."
"அவங்க எதையுமே சொல்லவில்லை. அவளை நெருங்காதேனு மட்டுமே சொன்னாங்க"
"ஏன்னா… சிக்கல் உன்னிடம் இல்லை. ரேச்சலிடம்தான் உள்ளது. அவளுக்கு தன்னுடைய கணவனையும் குழந்தையையும் நினைவில்லை. ஒருவேளை ஆழ்மனதில் அந்த நினைவு இருந்திருக்கலாம். அதனால்தான் மனுகுட்டியிடம் பிரியமாக இருந்திருக்கிறாள்."
"இதை என்னிடம் நீ ஏன் சொல்லவில்லை ரஞ்சன்."
"ரேச்சல் உன்னிடமிருந்து விலகி இருப்பதுதான் அவளுடைய எதிர்காலத்திற்கு நல்லது என்று