அனுப்பி வைத்தான். அவள் சென்றதும்…
"ஏன் இப்படி ஒரு முடிவு சத்யன்?"
"ப்ச்… கூட இருப்பவங்களே நம்பாதபோது எனக்கே என் மீது நம்பிக்கை குறைந்து விடும்."
"என்ன சொல்ல வர்றேனு புரியலை. தனுவை கல்யாணம் செய்து விட்டு நிம்மதியாக இருக்க முடியாது சத்யன் .. அவள் உனக்கு நல்ல மனைவியாக இருக்க மாட்டாள்"
"எனக்கு தெரியும்"
"அப்புறம் எதுக்கு…"
"மற்றவர்கள் முன் எனக்கு மனைவியாக இருப்பாள். எனக்கு ஒரு மனைவி இருப்பதால்…. சில ரைட்ஸ் கிடைக்கும். ஒரு பெண்ணுடன் நான் பேசுவதை தவறாக நினைக்க மாட்டார்கள்… யார் என்ன நினைப்பார்கள் என்று தயங்க வேண்டாம். நான் சுதந்திரமாக இருக்கலாம்…"
"ரேச்சலுடன் நீ பேசுவதை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை…"
"அது தவறுதான் ரஞ்சன். நந்தினி நினைத்ததும் தவறுதான். என்னை யாருடனாவது ஜோடி சேர்த்து வைக்க நினைத்தது தவறு. ரேச்சலிடம் கொஞ்சம் நெருங்கியது என் தவறுதான். அதற்கு காரணமும் தெரிந்து விட்டது. ஷீ ரிசம்பள்ஸ் மீரா… தட்ஸ் ஆல்… நான் தெளிவாக இருக்கேன். நீங்க இனி குழம்ப கூடாதுனு இந்த முடிவு. சத்யனுக்கு கல்யாணம் ஆகிவிட்டால்… இந்த கண்ராவி திங்கிங் வராது. லெட் மீ ஹாவ் ஃப்ரிடம்"
"நீ தனுவிடம் மாட்டிக் கொண்டு எப்படி சுதந்திரமாக இருப்பாய்"
"தனுவை எங்கே ஸ்டாப் பண்ணனும்னு எனக்கு தெரியும்"
"உன்னை எங்கே கார்னர் பண்ணனும்னு அவளுக்கு தெரியும் "
"ஸ்டுப்பிட்…'
"நீ போடும் கண்டீஷனை மாற்ற நிறைய வழிகள் இருக்கின்றன. மனைவிங்கற வகையில் நிறைய சந்தர்ப்பங்களில் அவளால் உன்னை கட்டுபடுத்த முடியும்"
"நந்துதான் ரொமாண்டிக் ஸ்டோரி படிப்பாள்னு நினைச்சேன். நீயுமா… ?. அக்ரிமெண்ட்டை உடைக்க ஹீரோயினால்தான் முடியும். தனு ஹீரோயின் அல்ல… மைன்ட் இட். அப்புறம் நீயும் ஹீரோவுடைய நண்பன் கிடையாது. அட்வைஸ் பண்ண வேண்டாம்…"
"விளையாடாதே சத்தி… நடந்ததை மறந்துட்டு நல்லதை நினைப்போம். நான் நந்துவிடம் பேசறேன். உனக்கு வேறு திருமணம் செய்ய ட்ரை பண்ண மாட்டாள். அதோட மனுவை நாங்க பார்த்துக்கறோம். ப்ளீஸ்…"
"எனக்கு வேலை இருக்கு ரஞ்சன். தேங்கஸ் ஃபார் எவ்ரிதிங்… இனி நீ எனக்கு உதவ வேண்டியதில்லை. என் வாழ்க்கையை நானே பார்த்துப்பேன்"
"ப்ளீஸ்…"