"நான் வாழ்க்கைனு சொன்னது மனுவையும்தான்…"
சத்யன் தீர்மானமாக சொல்லவும் ரஞ்சன் கிளம்பினான்.
"யோசிச்சு செய் சத்தி"
"ஓகே… " சத்யன் மேஜையில் இருந்த குறிப்புகளை படிக்க தொடங்கினான்…. அவனை வெறுமையாக பார்த்து விட்டு ரஞ்சன் வெளியேறினான்.
அவனால் அந்த விஷயத்தை அத்துடன் விட முடியாது. மீண்டும் முயற்சிக்க வேண்டும்.
மாலை வீடு திரும்பியதும் தோட்டத்தில பசுமை குடிலில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்த சத்யனிடம் சென்றான்.
அவன் தோட்டத்தில் நடந்து போவதை பார்த்த ரேச்சல் கல்பியின் வேலை பற்றி அவனுடன் பேசும் முடிவுடன் அவனை பின் தொடர்ந்தாள். அவன் அருகில் செல்லும் முன் அவன் குடிலுக்குள் நுழைந்து விட்டான். அவள் உள்ளே போகலாமா என்று யோசித்தபோது சத்யன் அமர்ந்திருப்பதை கண்டு ஒளிந்து நின்று விட்டாள்.
ப்ச்… இப்போது ரஞ்சன் அண்ணாவுடன் பேச முடியாது. திரும்பி போகலாம் என்றால் சத்யனின் கண்ணில் பட நேரிடலாம். இப்போது அவன் வாசலுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருப்பதால் அவள் நிற்பது தெரியாது… சத்தம் போடாமல் மெல்ல நகர்ந்து விட வேண்டும்…
ரேச்சல் மெதுவாக தன் வழி நோக்கி திரும்பியபோது…
"ரேச்சலை உன்னுடன் சேர்த்து வைத்து தப்பாக நினைக்கவில்லை சத்யன். ட்ரஸ்ட் மீ…"
அட… அவளை பற்றி பேசுகிறார்களே… அவள் கவனப்படுத்தினாள்…
"வேறு என்ன நினைச்ச… நான் ரேச்சலிடம் மயங்கி போய் அவள் பின் சுற்றுவதாக நினைத்தாய்தானே…"
"இல்லை… அவளிடம் உனக்கு ஒரு சாஃப்ட் கார்னர்…"
"கார்னரும் இல்லை… முட்டு சந்தும் இல்லை… என்னுடைய மீராவின் பண்பு முன் அவள் வேல்யூவே இல்லாதவள். அவளுடைய துணிச்சல்… நேர்மை… சதந்திர உணர்வு… இவற்றை ரசிக்கலாம். சிறந்த கதாபாத்திரம்னு ஆஸ்கார் அவார்டுகூட தரலாம். ஆனால் கூடவே வைத்து வாழ முடியாது. முணுக்கென்றால் கோபிப்பது… படக்குனு வார்த்தைகளை அள்ளி வீசுவது… சரியான வாயாடி… சண்டைகாரி...இதெல்லாம் எனக்கு ஒத்து வருமா... "
"தனு அதைவிட மோசம்.."
"ஆனால் என்னை எதிர்த்து பேச மாட்டாள். அவளுக்கு பணம் வேண்டும். வசதியான வாழ்க்கை வேண்டும். அவ்வளவுதான்.. அதை தந்து விட்டால் போதும்… ஆனால் ரேச்சல் மாதிரி பெண்கள் புரட்சி பேசி சாகடிப்பாங்க. லா பாயின்ட் பேசி நம்மை ட்ரிகர் செய்வாங்க. அவளை