(Reading time: 32 - 63 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

பிடிக்கவில்லைஅவனைப் போலவே

ஆமாம்… சத்யன் பக்கம் ரேச்சல் சாய்வதை அவன் ஒருபோதும் விரும்பியதில்லைஇப்போது மீரா என்று தெரிந்த பின்பு அறவே அதை தவிர்க்க விரும்பினான்

அவனுடைய இலக்கு மீராவை அவளுடைய கணவனிடம் சேர்ப்பதுதான். அரசரின் கட்டளையை நிறைவேற்றும் தளபதிபோல தன்னை நினைத்துக் கொண்டான். மேத்யூஸின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பில் அவன் தன்னை மும்முரமாக இணைத்துக் கொண்டதால் அவன் சிஸ்டமாட்டிக்காக நடந்து கொண்டிருந்தான்.

மீராவை எப்படி கண்டுபிடிப்பது.?...  முதலில் மீராவின் முகவரியை தேட வேண்டும்... பிறகு அவளுடைய கணவனை கண்டுபிடிக்க வேண்டும்…  அவனிடம் சென்று நடந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று அவன் திட்டம் வகுத்துக் கொண்டான். ம்மனைவியின் இந்த புதிய முகம் மீராவின் கணவனுக்கு பிடிக்குமா?...

எப்படி பார்த்தாலும் மீரா அவனுக்கு உறவினர்தான். சிறுவயதில் பிரிந்ததனால் உறவு இல்லை என்றாகிவிடுமா?. எனவே கூடுதல் பொறுப்பாக மீராவை அவள் கணவனுடன் சேர்க்க வேண்டும் என்பதை அவன் கடமையாக  தீர்மானித்துக் கொண்டான்

கடிவாளம் போட்ட குதிரையைப் போல அவன் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருந்ததால் அவனுக்கு மிக அருகிலேயே இருந்த உண்மையான விவரங்களை கவனிக்க முடியாமல் போய்விட்டது.  ஒரு நிமிடம் அவன் அந்த ஓட்டத்தை நிறுத்திவிட்டு யோசித்திருந்தால் அவனால் உண்மையை கண்டு பிடித்திருக்க முடியும். இதே நிலையில்தான் ரஞ்சனும் சத்தியனும் இருந்தார்கள்.

அவர்களுக்குத் தேவையான... தேடிக்கொண்டிருந்த உண்மையை அவர்கள் சுவாசிக்கும் காற்றிலேயே மிக அருகில் கலந்திருந்தது. அதை  கவனிக்கத் தவறிவிட்டார்கள். அதனால் இன்னும் குழப்பம் அதிகமாகிவிட்டது. ரஞ்சனுக்கு சத்தியன் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கவனம்…  சத்யனுக்கு ரஞ்சன் மீது இருந்த கோபத்தால் வந்த குழப்பம்... ஜெமியை பொறுத்தவரை  மீராவின் நினைவில் இருந்ததால் ரேச்சலை சுற்றி நடக்கும் விஷயங்களை கவனிக்க முடியவில்லை.

இப்போதும்கூட அவன் மிக முக்கியமாக செய்ய வேண்டிய வேலை ஒன்று இருந்தது… இந்த விவரத்தை அத்தையிடம் தெரிவித்தாக வேண்டும். அவர் மீராவை பிரிய மனதளவில் தயாராக வேண்டும். அதை இன்றே செய்தாக வேண்டும்

மீராவின் உறவினரை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்டாலும் அவளுக்குரிய சிகிச்சையை ஆரம்பித்தால் தான் ரேச்சல் இல்லை என்பது புரிந்து விடும். எப்படியும் அவள் தன்னுடைய கணவனுடன் சேர்ந்து விடுவாள். அப்போது ஷீலா அத்தையை சமாளித்தாக வேண்டும்

7 comments

  • Super episode Ma’m! The way everyone got to know the truth around the same time was described perfectly.. Flawless screenplay. Hope Kalpi comes out alive. Rachel’s/Meera nagging heart when she realized that she is not in good books of Sathya for simply no reason was described very nice. Waiting for next episode ! We will miss this story very much when it ends.
  • Woah woah :dance: :cool: fantastic ms sagambari 👏👏👏👏👏 ninga ivangalai ellam.neriya sutha vitalum the ice break was simply like a cakewalk :hatsoff: certainly sathyan oda paraparappu epi padikuravangalai thothikkum 👌😍😍 loved those moments azhaga ah capture seithu irukinga 👏👏👏 but thevai illamal he had.spoken too much abt Racheal nu thonudhu steam immediately meernu adhu nu theinjadhu eppadi plate mathitaru parunga :D anyway he is on track hope sathya kk favour ah adhu avanga memory il irundhu azhika padatum and at the same time Thanu kitta vera matikitaru, ellam chettan ala vandhadhu 👊 :P <br />Ini Meera oda naa enga irukendra dialogue ketka waiting :D :hatsoff: to her will power!! <br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.